4 ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக நியமித்தது செல்லும்.. சென்னை ஹைகோர்ட் போட்ட உத்தரவு
சென்னை: 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளராக நியமித்ததை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சத்தியக்குமார் பொது நலன் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் மனுதாரருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் முக்கிய திட்டங்கள், தகல்வகள், தேவையான செய்திகளை ஊடகங்கள் மற்றும் மக்களுக்கு சரியான நேரத்தில் கொண்டு செல்வதற்காக, எடுத்துரைப்பதற்காகவும் பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைக்கவும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், ஜெ ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், அமுதா ஐஏஎஸ், தீரஜ் குமார் ஐஏஎஸ், ககன் தீப்சிங் பேடி ஐஏஎஸ் ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
கடந்த மாதம் 14 ஆம் தேதி தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த நிலையில், தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சத்தியக்குமார் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
முறையாக அரசாணை பிறப்பித்து ஆணை வெளியிடாமல், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டு இருப்பது சட்டப்படி செல்லுபடியாகக் கூடியதல்ல. இதில் எந்த சட்ட பலனும் இல்லை. மேலும் செய்தி தொடர்பாளராக இவர்களை பயன்படுத்தி ஆளுங்கட்சிக்கு சாதகமாக செய்திகள் வெளியிட நேரிடும் அபாயம் உள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நியமிக்கப்படவில்லை
எனவே இது அரசியல் சாசன கொள்கைகளுக்கு எதிராக உள்ளதால், 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசின் செய்தி தொடர்பாளாராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பத்திரிகை செய்திக் குறிப்பை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி, எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், 'அரசியல் சாசனம் இயற்றப்பட்ட பிறகு தமிழகத்தில் 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு செய்தித் தொடர்பாளர்களாக முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது சட்டவிரோதம் என்று வாதிடப்பட்டது. அரசு தரப்பில், "ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்படவில்லை. அலுவல் ரீதியாக மட்டுமே அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு
ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் எந்த சட்டமும், விதிகளும் இல்லை" என கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், 4 ஐஏஎஸ் அதிகாரிகளை அரசின் செய்தி தொடர்பாளராக நியமித்தது செல்லும் என்று உத்தரவிட்டனர். மேலும், வழக்கறிஞர் சத்தியக்குமாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications