மேயர் பிரியாவை பார்த்ததுமே.. முட்டி போட்டு கெஞ்சி அழுத ஊழியர்கள்.. சென்னையில் பரபரப்பு
மேயர் பிரியா ராஜனிடம் மருத்துவமனை ஊழியர்கள் புகார் சொன்னார்கள்
சென்னை: சென்னை மேயர் பிரியா ராஜன் கலந்து கொண்ட, தரமணி நிகழ்வில் பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஏழை, எளிய மக்கள் முழுமையாக பயன்பெறும் வகையில், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு பக்கத்திலேயே இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோய்களுக்கான சிகிச்சைகளை உடனடியாக அளிப்பதற்கு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான மருத்துவ வசதிகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்பட்டு வருகிறது..

தரமணி நிகழ்வு
அத்தனையும் மக்களுக்கு பயன்தர தக்கவகையில் அமைந்து வருகிறது.. அந்த வகையில், அடையாறு மண்டலம் தரமணி, பாரதியார் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை சென்னை மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார்... தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம், கோவிட் தடுப்பூசி முகாம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

நர்ஸ்கள்
இந்த மருத்துவ முகாமில் 30 டாக்டர்கள், நர்ஸ்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.. இந்த நிகழ்வில் மேயர் பிரியா ராஜன் பேசும்போது, "ஏற்கனவே கொளத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்... இப்போது மூன்றாவது இடமாக தரமணியில் தொடங்கப்பட்டுள்ளது... தொடர்ந்து இந்த முகாம்கள் மீதமுள்ள அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்தப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நேரில் ஆய்வு
முன்னதாக, இந்த முகாமில் அமைக்கப்பட்டிருக்கும் பரிசோதனை மையங்களை மேற்பார்வையிட்டார் மேயர் பிரியா ராஜன்... பள்ளியின் முதல்மாடியில் அமைக்கப்பட்டிருந்த இயற்கை மருத்துவ மையத்திற்கும் பார்வையிட சென்றார்.. அப்போதுதான் திடீரென்று மேயரின் முன்பு ஊழியர்கள் சிலர் மண்டியிட்டு கண்ணீர் விட ஆரம்பித்தனர்.

சம்பளம்
தாங்கள் ஆயுஷ் மருத்துவமனையை தொடங்கியது முதல் கடந்த 6 வருடங்களாக மருத்துவம் சாரா பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறோம்... எங்களுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஒப்பந்ததாரர் எங்களது சம்பளத்தை தரவில்லை.. கொடுக்க வேண்டிய 10 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தில், 8500 ரூபாய் மட்டுமே தருகிறார்.. இதை கேட்டதற்கு 3 மாதமாக சம்பளமே தராமல் இழுத்தடிக்கிறார்கள்...

உறுதி
அவர்கள் சொல்கிறபடி கேட்க வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்... நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அழுது கொண்டே சொன்னார்கள்.. இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியடைந்த பிரியாராஜன், நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி தந்தார்.. புதிதாக பொறுப்பேற்ற மேயர் முன்பு, முட்டி போட்டு ஊழியர்கள் அழுது புகார் சொன்ன விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications