Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயிலில் இந்த தவறை மட்டும் செய்யக்கூடாது.. உயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய மேஜர் மேட்டர் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயில் எழுதும்போது என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்று பதிவுத்துறை விரிவாக விளக்கியிருக்கிறது. இதோ ஒருசில விதிமுறைகளை பார்க்கலாம்.

உயில் எழுதும்போது யாருக்கு சொத்து கிடைக்க வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்... ஆனால், வாரிசுகளுக்கு சம அளவில் சொத்து பிரிக்கப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. ஒருவருக்கு அதிகமாக கிடைத்தால் மற்றவர் அதை எதிர்க்க முடியாது..

Will document preparing a Will document Will Settlement Registration Department

மைனர்: நீங்கள் இல்லாத நிலையில், உங்கள் சொத்துப் பிரிவின் நடவடிக்கைகளை யாராவது மேற்பார்வையிட வேண்டும்... இதனையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.. நீங்கள் நியமிக்கும் நபர் குடும்ப உறுப்பினராகவும் இருக்கலாம். அதற்காக மைனரை நியமிக்க முடியாது. அப்படி நியமித்தால் உயில் செல்லுபடியாகமல் போய்விடும்.

எனவே, குடும்ப உறுப்பினரைவிட, வழக்கறிஞரை நிறைவேற்றுபவராக நியமிப்பது சரியாக இருக்கும். எனவே, சிவில் வழக்கறிஞரை கொண்டு உயில் எழுதுவது மிகவும் முக்கியமாகும்,

உறவுகள்: எப்போதுமே, பயனாளிகளுடன் உங்களது உறவு என்ன? தேதி, இடம், போன்றவைகளில் தவறுகள் வந்துவிடும்.. அதுமட்டுமல்லாமல், உயிலின் செல்லுபடியை தீர்மானிப்பதில் தேதியும், இடமும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதால், அதனை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

அதேபோல, உயிலில் உங்கள் பெயர், தேதி, உங்களது முகவரி போன்றவற்றை குறிப்பிட வேண்டும். உயிலின் எல்லா பக்கங்களிலும் உங்கள் கையெழுத்தையும், கட்டைவிரல் பதிவையும் குறிக்க வேண்டும். உயிலில் எழுதும் ஒவ்வொரு வாக்கியமும் தெளிவாக இருக்க வேண்டுமே தவிர, மாறுபட்ட அர்த்தங்களை கொண்டதாகவோ, குழப்பம் தரக்கூடியாகவோ, தவறான புரிதலை ஏற்படுத்தக் கூடியதாகவோ இருக்கக்கூடாது.
கையெழுத்து: உயில் எழுதி முடித்ததுமே, கடைசி வாக்கியத்துக்கு சற்று இடம்விட்டு கீழே கையெழுத்திட வேண்டும். காரணம், அந்த கையெழுத்திற்கு கீழே ஏதாவது எழுத நேர்ந்தால், அவை உயிலின் ஒரு பகுதியாக கருதமுடியாது..

2 சாட்சி கையெழுத்துகள் கட்டாயம் இருக்க வேண்டும்.. ஆனால் இவர்கள் உயிலின் பயனாளிகளாக இருக்கக்கூடாது.. அப்படியிருந்தால், உயில் செல்லாமல் போய்விடும்..

சாட்சி கையெழுத்து: இவர்களின் பெயர், முகவரி, வயது உட்பட அனைத்து விவரங்களும் அதில் தெளிவாக இருக்க வேண்டும்.. அதேபோல பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும், உயில் எழுதலாம். இதற்கும் 2 சாட்சி கையெழுத்து தேவைப்படும்.. உயிலில் டாக்டர், வக்கீல்களின் சாட்சி கையெழுத்துகளும் கட்டாயம் இருக்க வேண்டும்.

எப்போதுமே ஒருவர் உயில் எழுதுவது, அவரது அடிப்படை உரிமையாகவும், கடைசி ஆசையாகவும் கருத்தில் கொள்ளப்படுகிறது... உயில் ஆவணம் எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவிற்காக தாக்கல் செய்யப்படலாம்.. உயில் ஆவணத்தை பொறுத்த வரையில், அதன் பதிவுக்கான தாக்கல் செய்ய கால வரம்பு எதுவும் இல்லை. ஆனால், உயில் எழுதிய பிறகு நம்பிக்கைக்கு உரிய இரு நபர்களிடம் அதுபற்றி தெரிவிப்பது மிகவும் அவசியம். அப்போதுதான், தக்க சமயத்தில் உரியவர்களிடம் உயில் சென்று சேரும்.

பதிவு அவசியம்: உயிலை எழுதியதும் அதை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாலும், அது சட்டப்பூர்வமானது மற்றும் அதிகாரப்பூர்வமானது என்பதால் பதிவு செய்வதே சரி.. இதனால், சிக்கல்கள் எதுவும் வராது.

உயிலை எழுதி முடித்தவுடன் பதிவு செய்து, அதன் நகலை பதிவு அலுவலகத்தில் கொடுத்துவிடுவது நல்லது... உயிலுக்குரிய சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் வருகிறதோ அங்கு பதிவு செய்யப்பட வேண்டும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+