டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து- அரிட்டாபட்டியில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி மக்கள் கொண்டாட்டம்!
சென்னை: மதுரை அரிட்டாபட்டியில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்த அறிவிப்பை வரவேற்று அப்பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து அரிட்டாபட்டி பகுதியை பல்லுயிர் பெருக்கமண்டலமாக கருதி டங்ஸ்டன் சுரங்க ஏல அனுமதியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாயக்கர்பட்டியில் 2,015.51 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கத்தை குத்தகைக்கு விடும் ஏல அறிவிப்பு வெளியானது. இந்த ஏலமானது சர்ச்சைக்குரிய, தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தாவின் துணை குழுமமான ஹிந்துஸ்தான் ஜிங் லிமிடெட்டுக்கு வழங்கப்பட்டது.

இதனால் நாயக்கர்பட்டியை சுற்றிய அரிட்டாபட்டி உள்ளிட்ட பல கிராம மக்கள் பெரும் கொந்தளிப்புக்குள்ளாகினர். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றி தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டங்களுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான போராட்டங்களும் நடத்தப்பட்டன.
தமிழ்நாடு சட்டசபையிலும் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில், இன்றியமையாத கனிமங்களின் உரிமையை மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசு ஏலம் விடக் கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந் தேதி தமிழக அரசு வலியுறுத்தியது. இதையும் மீறி ஏல நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது. டங்ஸ்டன் சுரங்க உரிமம் வழங்கப்பட்ட பகுதியானது, குடைவரைக் கோவில்கள், சமண சிற்பங்கள், தமிழ்ப் பிராமி வட்டெழுத்துகள், பஞ்ச பாண்டவர் படுகைகள் ஆகிய வரலாற்றுச் சின்னங்களையும் அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் டங்கஸ்டன் சுரங்கம் வந்தால் நான் முதல்வராக பொறுப்பில் இருக்கமாட்டேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானமும் மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் மத்திய அரசு தற்போது, ஹிந்துஸ்தான் ஜிங்க் குழுமத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏல அனுமதியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அரிட்டாபட்டி பகுதியை பல்லுயிர் பெருக்கமண்டலமாக கருதி இந்த சுரங்க அனுமதி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுகின்றனர். மேலும் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதைத் தடுத்த தமிழ்நாடு அரசு மற்றும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அப்பகுதி மக்கள் நன்றியும் தெரிவித்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications