ரஜினிகாந்த் தமிழகத்தில் எழுச்சியை உருவாக்குவார்... சொல்வது யார் தெரியுமா..?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்குவார் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
தமிழகத்தை வளமாக்கும் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் அவர் வெற்றியும் பெறுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் ஆதரவு எப்போதும் ஆன்மிக அரசியலுக்குத்தான் என அர்ஜுன் சம்பத் தெரிவித்திருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தல்
கொரோனா பரபரப்பு படிப்படியாக குறைந்து வரும் சூழலில் அரசியல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில மாதங்களாக ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த அவரது ஆதரவாளர்கள், ஆலோசகர்கள் இப்போது மீண்டும் ரஜினி வருவார் வெல்வார் என்கிற ரீதியில் பேசத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் வளமாகும்
நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்குவார் என்றும் தமிழகத்தை வளமாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் என்ற அற்புதம் நிகழும் என்றும் ரஜினிகாந்திற்கு இந்து மக்கள் கட்சி பக்கபலமாக நிற்பதோடு முழு ஆதரவு தரும் எனவும் கூறியுள்ளார்.

தேர்தல் கூட்டணி
ரஜினிகாந்த் நவம்பரில் கட்சி தொடங்குவது உறுதி எனக் கூறப்படும் நிலையில் தனித்து தேர்தலை சந்திப்பாரா அல்லது கூட்டணி அமைப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதனிடையே தனித்து களம் காண வேண்டும் என்றும் கிங் மேக்கராக இருப்பதை விட அவரே கிங்காக வர வேண்டும் எனவும் ரசிகர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

ரஜினி பேச்சு
கடந்த மார்ச் 12-ம் தேதி சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தேர்தலின் போது மட்டும் நிர்வாகிகளை நியமித்துவிட்டு தேர்தலுக்கு பிறகு நிர்வாகிகளை கலைத்துவிடுவது, மக்களிடம் எழுச்சியும், அலையும் ஏற்பட வேண்டும் அவ்வாறு ஏற்படும் போது தாம் நிச்சயம் வருவேன் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications