ஆம்ஸ்ட்ராங் முகத்தை பார்த்ததுமே! திருமாவளவனின் கைகளை பிடித்து கதறிய பா.ரஞ்சித்! பின்னணி என்ன?
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனின் கைகளை பிடித்துக் கொண்டு இயக்குநர் பா.ரஞ்சித் கதறி அழுத காட்சிகள் காண்போரை கலங்கச் செய்தது.
சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாத் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே ஆதரவாளர்களுடன் இருந்த போது அவரை இரு சக்கர வாகனத்தில் சுற்றி வளைத்த கும்பல், அரிவாளால் வெட்டி சாய்த்தது. இதில் நிலை குலைந்து ஆம்ஸ்ட்ராங் கீழே விழுந்தார்.

இதையடுத்து அந்த கும்பல் தப்பியோடிவிட்டனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆம்ஸ்ட்ராங்கின் மரண செய்தி கேட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார் பா.ரஞ்சித்.
அவரை பார்த்ததும் ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் கதறி கொண்டே ஓடி வந்தனர். அப்போது துக்கம் தாங்காமல் பா.ரஞ்சித், தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதார். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு நள்ளிரவு முழுவதும் உடல் இருந்த நிலையில் காலையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வருகை தந்தார். அப்போது பா.ரஞ்சித்தும் அங்கு வந்தார். திருமாவளவனுடன் சென்று ஆம்ஸ்ட்ராங் முகத்தை காண சென்ற பா.ரஞ்சித் துக்கம் தாங்காமல் திருமாவின் கைகளை பிடித்துக் கொண்டு கதறி அழுதார்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக ஆம்ஸ்ட்ராங் பொறுப்பேற்றது முதல் பல இளைஞர்களின் கல்விக்கு உதவி செய்து வந்துள்ளார். அந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர்தான் இயக்குநர் பா.ரஞ்சித். இவர் சிறுவயது முதலே பகுஜன் சமாத் கட்சியுடன் இணைந்து பணியாற்றியவர்.
அம்பேத்கர் குறித்து பா.ரஞ்சித்திற்கு விளக்கியவர் ஆம்ஸ்ட்ராங்தான். தனது சினிமாக்களில் பெரியார், அம்பேத்கரின் தத்துவங்களையும் கொள்கைகளையும் பா.ரஞ்சித் தைரியமாக பேசுவதற்கு காரணமே ஆம்ஸ்ட்ராங்தான். ரஞ்சித்துக்கு புரட்சி இயக்குநர் என்ற பட்டத்தை வழங்கியவர் ஆம்ஸ்ட்ராங். இயக்குநர் பா. ரஞ்சித் தனது பலமாக கருதியது ஆம்ஸ்ட்ராங்கைத்தான். அதனால்தான் இன்று ஆம்ஸ்ட்ராங் கொலையுண்டதை அறிந்து ரஞ்சித் நிலைக்குலைந்து போயுள்ளார்.
-
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications