எய்தவர்கள் சொன்னதை விட அம்பு கொஞ்சம் அதிகமாக குதிக்கிறது. அரசினர் தீர்மானத்தில் ஈஸ்வரன் பேச்சு
சென்னை: தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழிந்த அரசினர் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன் வரவேற்று பேசினார்.
தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழிந்த அரசினர் தீர்மானத்திற்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன் ஆதரவு தெரிவித்து வரவேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- முதல்வர் கொண்டு வந்து இருக்கும் தீர்மானத்தை கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக மனமாற வரவேற்கிறோம். ஏறக்குறைய 4 ஆண்டுகள் கழித்து ஆளுநர் அவர்கள் மசோதாக்களை காரணம் எதுவும் சொல்லாமல், திருப்பி அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசை உச்ச நீதிமன்றத்தை நாட வைத்து இருப்பது வருத்தத்திற்கு உரியது. நமது மாநிலத்தில் உள்ள ஆளுநருக்கு எதிராக நாம் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. உச்ச நீதிமன்றம் பலமுறை சொல்லியிருக்கிறது. ஆளுநர் மக்களால் தேர்ந்து எடுக்கபட்டவர் அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு கட்டுப்பட்டவர். அமைச்சரவை என்ன சொல்கிறதோ. அதை செய்ய வேண்டும் என்று பலமுறை சொல்லியும் கூட இதை மறுபடியும் மறுபடியும் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
எய்தவர்கள் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அம்பு எய்தவர்கள் சொன்னதை விட கொஞ்சம் அதிகமாக குதிக்கிறது. கண்டிப்பாக தற்போது பல மாநிலங்களில் ஆளுநரின் செயல்பாடுகள் டெல்லியில் இருக்கும் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கக் கூடியதாக இது அமைந்துவிடும் என்று மகக்ள் மத்தியில் இன்று பேசுகிறார்கள். என்றைக்காவது நம்முடைய ஆளுநர் அதிகாரிகளை அழைத்து வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசியது உண்டா. என்னால் தமிழகத்திற்கு இந்த நல்லதை செய்து இருக்கிறேன். ஒன்றிய அரசில் இருந்து இதை கொண்டு வந்து இருக்கிறேன்.
உங்களால் முடியாததை நான் செய்து இருக்கிறேன் என்று எதாவது உண்டா. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை முடக்கும் செயல்பாடுகளைத்தான் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார். இது இன்றைக்குள்ள போராட்டம் இல்லை. 60 ஆண்டுகால போராட்டம். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications