தமிழகத்தில் விரைவில் உயரும் ஆட்டோ கட்டணம்? காரணம் இது தானாம்! புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா
சென்னை: ஏற்கனவே விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விரைவில் தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணமும் உயரக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முழுக்க ஆட்டோ கட்டணங்கள் முறையாக வசூலிக்கப்படுவதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே உள்ளது. அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைக் காட்டிலும் அதிக தொகை வசூலிக்கப்படுவதாக்கப் புகார்கள் எழுந்தன.
தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆட்டோ கட்டணம்
இதற்கிடையே ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்கு விசாரணையில், பெட்ரோல் , டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றியமைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் நீதிபதிகள், சரியான ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்து, அவை முறையாக வசூலிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அரசுக்கு அறிவுறுத்தினர்.

2013ஆம் ஆண்டு
தமிழ்நாட்டில் கடைசியாகக் கடந்த 2013ஆம் ஆண்டு ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. ஆனால், அதன் பின்னர் பெட்ரோல்-டீசல் விலை பெரியளவு உயர்ந்துவிட்டது. இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. எனவே, அதன் அடிப்படையில் ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

கோரிக்கை
2013இல் மாற்றி நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்கள்படி, ஆட்டோக்களின் அடிப்படை கட்டணம் 25 ரூபாயும், அடுத்து ஒவ்வொரு கிலோமீட்டருக்கு தலா 12 என்று நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, ஆட்டோ கட்டணங்களை முதல் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.50 மற்றும் அதன் பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.25 என்று மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. மேலும், காத்திருப்பு கட்டணமாக ஒரு நிமிடத்திற்கு ரூ.1 வசூலிக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

பேச்சுவார்த்தை
இது தொடர்பாக 12 ஆட்டோ தொழிற்சங்க பிரதிநிதிகள் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அரசு தனியாக ஒரு செயலியை உருவாக்க வேண்டும், ஜிபிஎஸ் டிஜிட்டல் மீட்டர் இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் உயரும் கட்டணம்
அரசால் எளிதாக நிறைவேற்றக் கூடிய கோரிக்கைகள் மட்டுமே முன்வைத்துள்ளதாகவும் இதை அரசு விரைந்து செயல்படுத்தும் என்று நம்புவதாகவும் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். எனவே, தற்போதைய பெட்ரோல்- டீசல் விலையைக் கருத்தில் கொண்டு விரைவில் ஆட்டோ கட்டணங்களும் உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications