ஆட்டோமொபைல் துறையில் சரிவு.. ஊழியர்களுக்கு 5 நாட்கள் கட்டாய விடுப்பு அளித்த அசோக் லேலண்ட் நிறுவனம்
Recommended Video
சென்னை: ஆட்டோமொபைல் துறையில் பெரும் சரிவு ஏற்பட்டதை அடுத்து ஊழியர்களுக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் 5 நாட்களுக்கு கட்டாய விடுப்பு அளித்துள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு 7.5 சதவீதம் ஆகும். ஆனால் நாட்டில் இந்த துறை தற்போது பெரும் சரிவை சந்தித்துள்ளது. பல்வேறு வாகன தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் நிறுவனங்களை மூடி வருகின்றனர்.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தனது மானேசர் மற்றும் குர்கான் ஆலைகளை இரண்டு நாட்களுக்கு மூடும் திட்டத்தை அறிவித்துள்ளது. முன்னதாக ஹூண்டாய் மற்றும் டொயோட்டா நெருக்கடியைத் தொடர்ந்து ஆலையை மூடியிருந்தன.

வாகன உற்பத்தி
இந்த நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனமும் தங்கள் ஊழியர்களுக்கு 5 நாட்கள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 9 -ஆம் தேதி வரை விடுப்பு அளித்துள்ளது. வாகன உற்பத்தி குறைவால் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த தொழிலாளர்கள்
வணிக ரீதியான வாகனங்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து ஊழியர்களுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 நாட்கள் உற்பத்தியை முடக்குவதால் நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்கள் 9000 பேர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

வெளியே ஒட்டிய நிறுவனம்
நிதி நிலையை கருத்தில் கொண்டு கட்டாய விடுப்பு நாட்களை மேலும் அதிகரிப்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யூனியன்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு நிறுவனத்தின் வெளியேயும் ஒட்டியுள்ளது.

கட்டாய விடுப்பு
எனினும் அத்தியாவசிய பணியில் உள்ளவர்கள் பணிக்கு வருவது குறித்து அந்தந்த துறைகளின் பொறுப்பாளர்கள் அறிவிப்பார்கள் என்றும் கூறியுள்ளது. மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் இது போல் கட்டாய விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாய விடுப்பு
மாருதி- சுசுகி, டிவிஎஸ், ஹீரோ உள்ளிட்ட முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கெனவே கட்டாய விடுப்பை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்டபோதிலும் பெரிய வாகன உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில் இந்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
-
மன்சூர் அலிகான் வாயில் இருந்து என்ன எடுத்தார்? - வீடியோ தீயாகப் பரவிய நிலையில் அவரே கொடுத்த விளக்கம் -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு











Click it and Unblock the Notifications