சிபிஎம் அவசர செயற்குழு.. திடீரென என்ட்ரி கொடுத்த வைகோ.. திமுக கூட்டணியில் பரபரப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடில் இழுபறி நீடித்து வருகிறது. சிபிஎம் செயற்குழு நடந்து கொண்டிருந்த போது அங்கு மதிமுக வைகோ திடீரென வருகை புரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. திமுக மற்றும் அதிமுக 2 கூட்டணிகளிலும் தொகுதி பங்கீடும் தீவிரமடைந்து வருகிறது.

திமுக - சிபிஎம் கூட்டணி
திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைந்திருப்பதால், கடந்தமுறை போட்டியிட்ட தொகுதிகளை விட குறைவான தொகுதிகளை பெற்று கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறார்கள். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்பதற்காக எங்களுக்கு குறைவான தொகுதியை ஒதுக்குவது ஏற்க முடியாது என கூறி வருகிறார்கள்.
திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி இடையே நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் உடன்பாடு ஏற்படவில்லை. கூடுதல் தொகுதி வேண்டும் என சிபிஎம் கட்சியும், கடந்தமுறை போட்டியிட்ட தொகுதிகளை விட குறைவான தொகுதியில் போட்டியிட வேண்டும் என திமுகவும் கூறி வருகிறார்கள். இதனால் கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
அவசர செயற்குழுவில் வைகோ
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகர் பகுதியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி, சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அங்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென அங்கு என்ட்ரி கொடுத்தார்.
பரபரப்பு விளக்கம்
கூட்டணி குறித்து அவர் ஆலோசனை நடத்த சென்றதாக தகவல் வெளியானது. இதுகுறித்து வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் பேபியை சந்திக்கவேக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வந்தேன். அவர் என்னுடைய நீண்ட கால நண்பர். என் மீது அதிக எல்ல்லையற்ற அக்கறை கொண்டவர். அன்பானவர். எனவே இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும் தான்.
இந்த அலுவலகத்தில் வைத்து நான் அரசியல் கேள்விகளுக்கு பதில் கூற மாட்டேன். நீங்கள் எது கேட்டாலும் சொல்ல மாட்டேன். தேர்தலுக்காக என்னிடம் பல கேள்விகளை கேட்பீர்கள் என்பது தெரியும். நான் எதுவும் சொல்ல மாட்டேன். நீங்கள் என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேன். எப்படி கேட்டாலும் பதில் இல்லை" என்று கூறி சென்றார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications