சட்டசபை தேர்தல் பிரசாரம்: தூத்துக்குடியில் ராகுல் காந்தி- உற்சாக வரவேற்பு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தூத்துக்குடி வருகை தந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்ப்பளித்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறும். தமிழகத்தில் ஏற்கனவே பிரசாரம் களைகட்டி இருக்கிறது.

தமிழகம், புதுவையில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பிரசாரம் செய்துள்ளனர். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகை தருகிறார். இன்று இரவு 10 மணிக்கு சென்னை வரும் அமித்ஷா, புதுச்சேரியின் காரைக்கால் மற்றும் தமிழகத்தின் விழுப்புரம் ஆகிய இடங்களில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் பங்கேற்கிறார்.
#WATCH Tamil Nadu: Congress leader Rahul Gandhi arrives in Thoothukudi. pic.twitter.com/a6LcNWU2ot
— ANI (@ANI) February 27, 2021
இதனிடையே 3 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகை தந்தார் ராகுல் காந்தி. டெல்லியில் இருந்து தூத்துக்குடிக்கு தனி விமானத்தில் வருகை தந்தார் ராகுல் காந்தி.
தூத்துக்குடி விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.












Click it and Unblock the Notifications