ஷாக்! வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் விபத்துகள்.. தமிழகத்தில் வெறும் 15 நாட்களில் 38 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 15 நாட்களில் மட்டும் மாநிலத்தில் மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, கடந்த அக். 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட வடதமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை
கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அதேபோல சில பகுதிகளில் மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தும், மரம் விழுந்தும் ஏற்படும் விபத்துகளும் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

38 பேர் பலி
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், கடந்த 15 நாட்களில் மட்டும் மாநிலத்தில் கனமழை தொடர்பான அசம்பாவித சம்பவங்களால் மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களில் மின்னல் தாக்கி 12 பேரும் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேபோல மழை வெள்ளம் காரணமாக 10 பேரும் மரம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

சென்னையில் தான் அதிகம்
மாவட்ட வாரியாக பார்க்கும் போது தலைநகர் சென்னையில் 5 போர் மழை வெள்ளம் சார்ந்த நிகழ்வுகளால் உயிரிழந்துள்ளனர். மேலும் மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் தலா 4 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல மழை வெள்ள பாதிப்புகளால் அரியலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை அரசு சார்பில் நிதியுதவி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
Recommended Video

கனமழை தொடரும்
வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று மாலை ஸ்ரீஹரி கோட்டாவுக்கும், காரைக்காலுக்கும் இடையே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
-
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications