நான் கிராமத்து பொண்ணு.. ஊக்க மருந்து பயன்படுத்தவே இல்லை.. அடிச்சு சொல்றேன்.. கோமதி மாரியப்பன்
ஊக்கமருந்து பயன்படுத்தவே இல்லை என்று கோமதி மாரியப்பன் கூறியுள்ளார்
Recommended Video
சென்னை: "நான் ஒரு கிராமத்துல பிறந்து வளர்ந்தவள்.. கடுமையான பயிற்சி எடுத்துக்கிட்டுதான் ஆசிய போட்டியில் ஜெயிச்சேன். அதனால 100 சதவீதம் உறுதியா சொல்வேன், நான் எந்த ஊக்கமருந்தும் பயன்படுத்தவில்லை" என்று கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
எதையுமே சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் மனோபாவம், வெற்றி பெற்றவர்களையும் விட்டுவைப்பதில்லை. இதற்கு வீராங்கனைகளும் விதிவிலக்கல்ல.
நம்ம ஊரை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்க பதக்கம் பெற்றதுமே அப்படி பூரித்து போய்விட்டோம். ஏதோ ஒரு கிராமத்தில், விவசாய குடும்பத்தில் பிறந்த ஒரு சாதாரண பெண் கடின உழைப்பால் பயிற்சி பெற்று, இந்த அளவுக்கு முன்னேறி உள்ளாரே என்று வியந்து போனோம்.

கோமதி
ஆனால் யார் கண் பட்டுதோ தெரியவில்லை.. இந்த வெற்றியையும் சந்தேகிக்கிறது. கோமதி ஊக்கமருந்து எடுத்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுசம்பந்தமான விசாரணை, வழக்கும் நடந்து வருகிறது. இந்நிலையில், திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோமதிக்கு பைக் தரப்பட்டு கவுரவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோமதி மாரிமுத்து:

தடகள போட்டி
"நான் ஆரம்பத்தில் பயிற்சி எடுத்த காலத்துல என்கிட்ட டூவீலர்கூட இல்லை. ஆனா எனக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இப்படி டூ வீலர் தந்ததுக்கு நன்றி சொல்லிக்கிறேன். ஆசிய தடகள போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்தினேன்னு என் மேல ஒரு குற்றச்சாட்டு சொல்றாங்க. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். கடுமையான பயிற்சி எடுத்துக்கிட்டுதான் ஆசிய போட்டியில் ஜெயிச்சேன்.

ரத்த பரிசோதனை
100 சதவீதம் உறுதியா சொல்வேன், நான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை. இது சம்பந்தமா ‘பி சாம்பிள்' டெஸ்ட் முடிவு ஆவணம் இன்னும் தரவில்லை. அது வந்ததும் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இல்லைன்னு நிரூபிப்பேன். என் மேல இப்படி ஒரு குற்றச்சாட்டை சொன்னதும், தனிப்பட்ட முறையில் என் ரத்த மாதிரிகளை நானே பரிசோதனை செய்து பார்த்தேன். ஆனால் அந்த ரிப்போர்ட்டில் ஊக்கமருந்து பயன்படுத்தியதுபோல எந்த ஆதாரமும் வரவில்லை.

இது உறுதி
என் மேல சொல்ற குற்றச்சாட்டு தொடர்பாக கோர்ட்டிலும் கேஸ் போட்டுள்ளேன். இந்த குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டு வருகிற செப்டம்பர் மாதம் கத்தாரில் நடக்க உள்ள உலக தடகள போட்டியில் பங்கேற்பேன். எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் பெற்று நம் நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்" என்றார். கோமதியின் உறுதியான பேச்சும், கடின உழைப்பும் அவருக்கு நிச்சயம் துணை நிற்கும் என்று நாமும் நம்புவோம்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications