ஏனுங்க.. எத்தினி வருஷமாங்க நிதி ஒதுக்கிட்டே இருப்பீங்க.. கொந்தளிக்கும் கொங்கு மண்டலம்
அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது பொதுமக்களை குமுற செய்துள்ளது.
Recommended Video

சென்னை: "ஏனுங்க... எத்தனை வருஷம்தாங்க நிதி ஒதுக்கிட்டே இருப்பாங்க.. இது என்ன புது திட்டமா? இந்த வருஷமும் நாங்க ஏமாற வேண்டியதுதானா?" என்று கொங்கு மண்டல மக்கள் கொதித்து போய் கேட்கிறார்கள்.
வழக்கமாக தேர்தல் வாக்குறுதிகளில் கட்டாயம் இடம்பெறுவதில் அவினாசி - அத்திக்கடவு திட்டமும் ஒன்றாகும்.
ஏனென்றால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட மக்களின் குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கக்கூடிய குடிநீர் திட்டம் என்பதுதான் காரணமே.

பட்ஜெட் தாக்கல்
அதுபோல பட்ஜெட் தாக்கலின்போது இந்த திட்டத்துக்காக நிதி ஒதுக்குவதும் வழக்கமான ஒன்றுதான். அத்திக்கடவு, அவினாசி என்றாலே வெறும் திட்டமாகவே இருந்து வருகிறது.

வெறும் சம்பிரதாயம்
அது மட்டுமல்ல, இத்திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தும் என்று நிதி ஒதுக்குவதும், உடனே மத்திய அரசிடமும் பிரதமரை சந்திக்கும்போதும் அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டுமென்று கோரிக்கை வைப்பதும் வழக்கமாக நடைபெறும் சம்பிரதாயமாக பார்க்கப்படுகிறது. இப்போதும்கூட இத்திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக துணை முதல்வர் இன்று அறிவித்துள்ளார்.

உண்ணாவிரதம்
இது குறித்து கோவை மாவட்ட மக்கள் சிலரிடம் கருத்து கேட்டபோது, சொன்னதாவது: "இந்த திட்டத்தை நிறைவேற்ற நாங்க என்ன செய்யலன்னு சொல்லுங்க? பேரணி, நடைப்பயணம், கடையடைப்பு, சாகும்வரை உண்ணாவிரதத்திலிருந்து மொட்டை அடிச்சு போராட்டம் வரை எல்லாமே செஞ்சோம். கடைசியில சோர்ந்தும் போயிட்டோம்.

என்ன தடை?
இப்படியே நிதியை ஒதுக்கி ஒதுக்கி எங்களை முட்டாளாக்கிட்டே இருந்தா என்ன பண்றது? ஒதுக்குற நிதி கூட அவங்களோட சொந்த பணம் இல்லை.. எல்லாம் மக்கள் பணம்தான். இந்த திட்டத்தை நிறைவேற்றதுல அப்படி என்னதான் தடை இருக்குன்னே புரியல" என்கின்றனர்.
இனி இந்த திட்டம் சம்பந்தமாக அரசு விரைந்து செயல்படுமா? அல்லது கிடப்பில் இந்த வருடமும் கிடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications