Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏடிஎம்மில் பணம் மாட்டிக்கிட்டா என்ன செய்வது? ஏடிஎம் மிஷினில் இந்த நம்பர் இருக்கா? ஈஸியா சரி பண்ணலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏடிஎம் செல்லும்போது, வாடிக்கையாளர் தன்னுடைய வங்கியின் ஏடிஎம் அல்லது வேறு எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் பணம் எடுக்கும்போது, பணம் சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதோ குட்டி டிப்ஸ்களை பார்ப்போம்.
சில சமயம், ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்கும்போது திடீரென பணம் வராமல் நின்றுவிடும்.. அப்படி நடக்கும்போது, உடனே அருகிலுள்ள வங்கி கிளையை தொடர்பு கொள்ள வேண்டும். ஒருவேளை வங்கி பூட்டப்பட்டிருந்தால் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு போன் மூலம் தகவல் தெரிவிக்கலாம்..

ஏடிஎம்: ரிசர்வ் வங்கி விதிப்படி, எப்போதுமே, ஏடிஎம் மிஷினில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர்கள், அவர்களது போன் நம்பர்கள் / கட்டணமில்லா பேசும் எண்கள் (Toll free)/ உதவி கோரும் ஹெல்ப் டெஸ்க் (Help Desk) எண்கள் ஆகியவை தெளிவாக எழுதப்பட்டிருக்கும். இதேபோன்று ஒயிட் லேபிள் ஏடிஎம்களிலும் புகார் தெரிவிப்பதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின்/ உதவி கோரும் எண்கள் எழுதப்பட்டிருக்கும்.

atm machine recredit atm transaction

எனவே, ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது பணம் சிக்கிக்கொண்டால், ஏடிஎம் மிஷினின் நம்பரை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் அக்கவுண்ட்டிலிருந்து பணம் கழிக்கப்பட்டதற்கான பில்லையும் ஏடிஎம்மில் இருந்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். பணம் வராத பட்சத்தில், இந்த வங்கி ஸ்டேட்மென்டே முக்கிய ஆதாரமாகும்.. காரணம்., இந்த பில்லில்தான், ஏடிஎம் ஐடி, இடம், பணம் எடுத்த நேரம் போன்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இதை வைத்தே சிக்கலை சரிசெய்யலாம்..

இழப்பீட்டு தொகை: ரிசர்வ் வங்கி விதிகளின்படி புகார் கொடுக்கப்பட்ட 7 நாட்களுக்கு வாடிக்கையாளர் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட வேண்டும். அப்படி வைக்கப்படவில்லை என்றால், வங்கியை நேரடியாக அணுகி பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிக்கலாம். 7 நாட்களுக்குள் பணம் திரும்ப வரவில்லை என்றால், அதற்கடுத்த ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் வங்கி மூலம், வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 100 வீதம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

இந்த இழப்பீட்டைப் பெற நீங்கள் உங்கள் புகாரை, உங்கள் ஏடிஎம் பரிவர்த்தனை நடந்த 30 தினங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். சில நேரங்களில் சில ஏடிஎம்களில் ரசீது வராது. அப்போது உங்கள் செல்போன் நம்பருக்கு வந்த பரிவர்த்தனை தொடர்பான மெசேஜ்ஜை புகாரின்போது காட்ட வேண்டி வரும்.

புகார்கள்: இதையும் மீறி உங்கள் புகாருக்கு உரிய தீர்வை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி தீர்த்து வைக்காமல் போனாலோ அல்லது வங்கியின் நடவடிக்கை உங்களுக்கு திருப்தி அளிக்காமல் போனாலோ, இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து பதில் கிடைத்த 30 நாட்களுக்குள் வங்கி தீர்ப்பாயத்துக்குப் புகார் தரலாம்.. ஒருவேளை உங்கள் வங்கி, உங்களுக்கு எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை என்றாலும், வங்கியிடம் புகார் கொடுத்த 30 தினங்களுக்குள் வங்கி தீர்ப்பாயத்திடம் புகார் அளிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+