கோர்ட்டில் பறந்த கார்.. வழக்கறிஞர்கள் மீது மோதல்… விசாரணையில் சிக்கிய போலி அதிகாரி
சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் என்று கூறி சொகுசு காரில் வேகமாக வந்தவரை வழக்கறிஞர்கள் பிடித்து போலீசில் ஒப்படைந்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சிபிஐ என ஸ்டிக்கர் ஒட்டிய கருப்பு நிற ஆடி கார் ஒன்று நுழைந்தது. அதிவேகத்தில் வந்த அந்த காரானது விபத்தில் சிக்கியது. மின்னல் வேகத்தில் கார் மோதியதில் வழக்கறிஞர் முரளிதரன் உள்ளிட்ட சிலர் காயம் அடைந்தனர்.

இதனையடுத்து காரை வழக்கறிஞர்கள் சுற்றி வளைத்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என்றும், உதவி ஆணையர், சிபிஐ அதிகாரி என முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலி அடையாள அட்டை ஒன்றையும் காட்டியுள்ளார்.
சந்தேகம் அடைந்த வழக்கறிஞர்கள் அவருடைய காருக்குள் சென்று பார்த்தனர். நாடாளுமன்ற ஸ்டிக்கர், சிபிஐ ஸ்டிக்கர், இண்டர்போல் ஸ்டிக்கர், ஏர்போர்ட் அத்தாரிட்டி ஸ்டிக்கர் என பல ஸ்டிக்கர்களை அந்த நபர் வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த நபர் மற்றும் அவருடைய சிபிஐ என்ற ஸ்டிக்கர் ஒட்டிய சொகுசு கார் ஆகியவற்றை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.இது தொடர்பாக இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications