Tamilnadu Auto: தமிழக அரசு அதிரடி.. இன்று முதல் ஆட்டோக்களை இயக்க அனுமதி.. முக்கிய கன்டிஷன்கள் உண்டு
சென்னை: சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர, பிற மாவட்டங்களில் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆட்டோக்கள் இயக்கப்படலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
Recommended Video
சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆட்டோக்கள் இயங்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.
அதேநேரம், ஆட்டோக்களை இயக்க, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த விவரமும் அரசின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அப்படி என்ன கூறியுள்ளது அரசு என்பதை பார்க்கலாம்.

ஒரே பயணி
ஒரு ஓட்டுனர், ஒரு பயணி என்ற விகிதத்தில் ஆட்டோக்களை இயக்க வேண்டும், அதற்கு மேல் ஆட்களை ஏற்றக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஷேர் ஆட்டோக்கள் என்ற பெயரிலான ஆட்டோ கான்செப்ட் இனி இருக்காது. ஷேர் ஆட்டோ என்றாலே, ஒருவருக்கு மேல் பயணிக்கும் ஆட்டோதான்.

சென்னைக்கு அனுமதியில்லை
கிருமி நாசினி கொண்டு பயணி கைகளை சுத்தப்படுத்திய பிறகே ஆட்டோவில் ஏற வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்கலாமே தவிர, பிற நேரங்களில் இயக்க கூடாது. நாளை முதல் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்க முடியும்.

முகக்கவசம்
டிரைவர் ற்றும் பயணிக்கு, முகக்கவசம் கட்டாயம். முகக் கவசம் அணியாமல் பயணிகள் ஏறக் கூடாது. டிரைவர் இயக்க கூடாது. ஒவ்வொரு முறை பயணி இறங்கி சென்ற பிறகும், கிருமி நாசினி கொண்டு, ஆட்டோ சுத்தம் செய்யப்பட வேண்டும். கண்டெயின்மென்ட் பகுதியில் ஆட்டோக்களை இயக்குவதற்கு அனுமதி கிடையாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்கள்
ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக பல்வேறு மாவட்ட தலைநகரங்களிலும் தினசரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்த நிலையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் மட்டும் சலூன் கடை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications