பி.எட் வினாத்தாள் முன்பே கசிந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி! உடனடியாக அதிரடி முடிவெடுத்த உயர்கல்வித்துறை
சென்னை: இன்று நடைபெறவிருந்த பி.எட். தேர்வு வினாத்தாள் நேற்றே கசிந்த நிலையில் மாற்று வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. புகாரை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய உயர்கல்வித்துறை, மாற்று வினாத்தாளை தேர்வு மையங்களுக்கு அனுப்பி தேர்வை திட்டமிட்டபடி நடத்தி வருகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய பி.எட் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பி.எட் இரண்டாம் ஆண்டு 4வது செமஸ்டர் "Creating an inclusive school" என்ற பாடத்திற்கான தேர்வு நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில், காலை 10 மணிக்கு இந்த தேர்வு நடக்கவிருந்த இந்த பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே, அதாவது நேற்று இரவே வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கவனத்திற்குச் சென்றதையடுத்து, கசிந்த வினாத்தாள் திரும்பப் பெறப்பட்டது. மாற்று வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 9.15 மணிக்குள் புதிய வினாத்தாள் தேர்வு மையங்களுக்கு இணையதளம் வாயிலாக அனுப்பி வைக்கப்படும் என்றும், பழைய வினாத்தாளைப் பயன்படுத்த வேண்டாம் என்று தேர்வு மையங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை மாற்று வினாத்தாள் கொண்டு, பி.எட் மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. நீட், நெட் உள்ளிட்ட மத்திய அரசு தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாட்டில் பி.எட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பீகாரை போல்! தமிழக பெண்களுக்கும் ரூ. 10000! இன்று காலை ரிலீஸ் செய்ய இருந்தாரா ஸ்டாலின்? பிளான் என்ன? -
ஸ்டாலினுக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு! மீண்டும் முதலமைச்சராக வருவார் என CNN கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
வாக்காளர்களிடையே நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியதா.. விஜய்-சங்கீதா கேஸ்? CNN கருத்துக்கணிப்பில் ஷாக் -
கரூர் எஸ்.பியை மாற்ற வேண்டும் என அண்ணாமலை சொன்ன அடுத்த சில மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் போட்ட ஆர்டர் -
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்! 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் PAN தேவையா? -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எப்போது வரை பெயர் சேர்க்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக முகாமில் கிளைமேக்ஸ் மாறுமோ? -
ரஜினி பற்றி வாயை விட்ட ஆதவ் அர்ஜுனா.. பாய்ந்து வந்த பாஜக! அப்போ கூட்டணி இல்லையா! -
சர்ச்சை ஓய்ந்தது.. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு! -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி!












Click it and Unblock the Notifications