இளையராஜா நல்லா மியூசிக் போட்டிருந்தாலும்.. நான்தான் திறமையாக வாயசைத்தேன்.. தெலுங்கு நடிகரின் காமெடி!
சென்னை: இசைஞானி இளையராஜாவின் பாடலுக்கு நான் திறமையாக வாயசைத்திருக்கிறேன் என அவரை புகழ்வது போல் தற்பெருமை பேசிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
Recommended Video
ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் பாலகிருஷ்ணா. தெலுங்கு நடிகராக இருந்தாலும் இவரது படங்களின் காட்சிகளை பார்த்து சிரிப்பதற்கென்றே தமிழ் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
அத்தகைய ரசிகர் பட்டாளத்தை தகர்ப்பது போல் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து பாலகிருஷ்ணா அளித்த பேட்டி உள்ளது. அது மட்டுமல்லாமல் ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித், ஜேம்ஸ் கேமரான் உள்ளிட்டோரையும் அவர் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தற்பெருமை
இசைஞானி இளையராஜாவையும் புகழ்வது போல் தனது தற்பெருமையையே பேசியுள்ளார் இந்த பாலகிருஷ்ணா. அந்த பேட்டியில் இசை குறித்து கேள்வி எழுப்பிய போது இளையராஜா பாடலுக்கு நான் திறமையாக வாயசைத்திருக்கிறேன் என்று பதில் அளித்திருக்கிறார்.

மியூசிக் டைரக்டர்
2011- இல் வெளிவந்த ஸ்ரீராமராஜ்ஜியம், 1992 இல் வெளிவந்த அஸ்வமேதம், தர்மஷேத்ரம், 1991 இல் வெளிவந்த ஆதித்யா 369, 1989 ஆம் ஆண்டில் வெளிவந்த அசோக சக்கரவர்த்தி, 1988 இல் வெளிவந்த ரக்தாபிஷேகம், 1984 ஆம் ஆண்டு வெளியான சஹாசமே ஜீவிதம் உள்ளிட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

பல மொழிகள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இவரது பாடல்களுக்காகவே தியேட்டர் சென்று பார்த்த ரசிகர்களும் உள்ளனர். வசனமே இல்லாமல் தனது பின்னணி இசை மூலம் மக்களுக்கு புரிய வைப்பதில் வல்லவர்.

திறமை
இத்தகைய இளையராஜாவை புகழ்வது போல் புகழ்ந்துவிட்டு பின்னர் அவரது பாடலுக்கு நான் திறமையாக வாயசைத்திருக்கிறேன் என கூறியுள்ளது இளையராஜாவின் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. இன்றும் குடும்பச் சண்டை, காதல் தோல்வி, வேலை பளு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அருமருந்தாக இருப்பது இளையராஜாவின் இசை என்பதை அறிந்தே இவ்வாறு வாய் கொழுப்பில் பாலகிருஷ்ணா பேசியுள்ளாரா? என்ற கேள்வி எழுகிறது.












Click it and Unblock the Notifications