தோழியுடன் லாட்ஜில் கள்ளக்காதலன்.. ரூமுக்குள் நுழைந்த காதலியால் ட்விஸ்ட்! கடலூரில் அதுக்கு மேல கொடுமை
சென்னை: இந்தியாவில் கள்ளக்காதல் தொடர்பான கொலைகளும், தற்கொலைகளும் அதிகரித்தபடியே உள்ளன.. உறவு சிக்கல்கள், தகாத உறவுகளினால் ஏற்படும் வன்முறைகளில் சம்பந்தப்பட்ட தம்பதியினரின் குழந்தைகள் பாதிக்கப்பட்டு விடுகிறார்கள்.. நாமக்கல்லில் நேற்று நடந்த தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வரும் நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த தற்கொலையானது அதற்கு மேல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. என்ன நடந்தது பெங்களூரு லாட்ஜில்?
ஈரோட்டை சேர்ந்த ராஜ்குமார் - ரேவதி என்ற தம்பதியின் வாழ்வில் குறுக்கே நுழைந்தார் சுமிதா என்ற பெண்.. இந்த கள்ளக்காதல் விவகாரம் மனைவி ரேவதிக்கு தெரிந்து கணவரை கண்டித்துள்ளார்..

நொந்து போன கள்ளக்காதல் ஜோடி
இதனால் நொந்துப்போன கள்ளக்காதல் ஜோடியோ, மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு, கோவையிலிந்து சேலத்திற்கு பஸ் ஏறியிருக்கிறார்கள்.. நேற்று குமாரபாளையம் அருகே சாப்பிடுவதற்காக பஸ்ஸை நிறுத்தியபோதுதான், கள்ளக்காதல் ஜோடி மயங்கி விழுந்து கிடப்பது தெரியவந்தது. உடனே இவர்களை மருத்துவமனையில அனுமதித்தும்கூட, சுமிதாவும், ராஜ்குமாரும் உயிரிழந்துவிட்டனர்..
பெங்களூரு எல்லைப்பகுதியில் யசோதா என்ற பெண் வசித்து வந்துள்ளார்.. யசோதாவுக்கு திருமணமாகிவிட்டது.. இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
ஆனாலும், அதே பகுதியைச் சேர்ந்த விஸ்வநாத் என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார் யசோதா.. விஸ்வநாத் ஆடிட்டராக இருப்பவராம்.. கடந்த 9 வருடங்களாகவே இவர்களுக்குள் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது..
பிரியங்கா - விஸ்வநாத்
ஒருநாள் தன்னுடைய நெருங்கிய தோழியான பிரியங்காவை, விஸ்வநாத்துக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் யசோதா.. இதற்கு பிறகு, பிரியங்காவும், விஸ்வநாத்தும் ஒருவருக்கொருவர் செல்போனை பகிர்ந்து கொண்டு, யசோதாவுக்கு தெரியாமல் செல்போனில் பேசி வந்துள்ளனர்.. நாளுக்கு நாள் இவர்களது நட்பு மற்றொரு கள்ளக்காதலாக மாறியது..
ஒருகட்டத்தில் பிரியங்காவிடம் நெருக்கமாகிவிட்டதால், விஸ்வநாத் யசோதாவிடம் முன்புபோல் பேசுவதை குறைத்து கொண்டுள்ளார்.. இது யசோதாவுக்கு சந்தேகத்தையும், வருத்தத்தையும் தந்தது.. பிரியங்காவை அறிமுகம் செய்து வைத்ததிலிருந்துதான், தன்னிடம் விஸ்வநாத் சரியாக பேசுவதில்லை என்பதை உணர்ந்த யசோதா, பிரியங்கா, விஸ்வநாத் இருவரின் நடவடிக்கைகளையும் ரகசியமாக கண்காணிக்கத் துவங்கினார்..
தோழி பிரியங்கா அறிமுகம்
அப்போதுதான் இருவரும் நெருக்கத்தில் இருப்பதையறிந்து ஆத்திரமடைந்தார்.. உடனே விஸ்வநாத்திடம் சென்று, பிரியங்காவுடன் இனிமேல் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று தகராறு செய்துள்ளார்.. எனினும், விஸ்வநாத் யசோதா பேச்சை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், விஸ்வநாத்தும் பிரியங்காவும் பெங்களூருவிலுள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள்.. இந்த விஷயம் யசோதாவுக்கு தெரிந்து, ஆவேசமானார்.. உடனடியாக அந்த லாட்ஜுக்கே கிளம்பி சென்றார் யசோதா..
லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி
அங்கு அறையிலிருந்த 2 பேரிடமும் தகராறு செய்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.. ஆனால் அந்த நேரத்திலும் யசோதாவின் பேச்சை, விஸ்வநாத், பிரியங்கா உதாசீனப்படுத்தியிருக்கிறார்கள்.. இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற யசோதா, இருவரையும் லாட்ஜ் ரூமிலேயே வைத்து கடுமையாக தாக்கியிருக்கிறார்.
அப்போதும் யசோதாவுக்கு ஆத்திரம் தீரவில்லை.. இதனால் அங்கிருந்த இன்னொரு ரூமுக்குள் சென்று, கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு அங்கிருந்த ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்...
இந்த தகவலறிந்து போலீசார் லாட்ஜூக்கு விரைந்து வந்தனர்.. யசோதாவின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.. தற்போது, விஸ்வநாத், பிரியங்காவிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications