ஊரே வியக்கும் மாற்றம்! விரைவில் சென்னை ஏர்போர்ட்டில்.. அந்த மேட்டரை கையில் எடுத்த விமான நிலைய ஆணையம்
சென்னை: தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் பல முக்கிய மாற்றங்கள் வர உள்ளது. இது வரும் காலத்தில் விமானச் சேவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தியாவிலே மிகவும் பிஸியான ஏர்போர்ட்களில் ஒன்றாகச் சென்னை ஏர்போர்ட் இருக்கிறது. சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த ஏர்போர்ட்டில் இருந்து தினசரி ஏகப்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

நாட்டில் 5ஆவது பிஸியான ஏர்போர்ட்டாக இருக்கும் சென்னை ஏர்போர்ட்டில் மேலும் பல மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக பீக் ஹவர்ஸில் அதிக உள்நாட்டு விமானங்களுக்கு இடமளிக்கும் வகையில் சென்னை விமான நிலையத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
விமான நிலையம்: சென்னை ஏர்போர்ட்டில் சர்வதேச விமானங்களுக்கு ஏற்கனவே புதிதாக முனையம் திறக்கப்பட்டுள்ளது. இதனைப் பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாத கடைசியில் திறந்து வைத்தார். படிப்படியாக விமான நிறுவனங்கள் புதிய முனையத்தில் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கின. இப்போது சர்வதேச விமானங்கள் அனைத்தும் புதிய முனையத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அங்குள்ள பழைய சர்வதேச முனையத்தையும் (T4) பயன்படுத்தாத நிலையில் உள்ள ஒரு தளத்தையும் இந்திய விமான நிலைய ஆணையம் கையில் எடுத்துள்ளது. அங்குத் தேவையான மாற்றங்களைச் செய்து.. அங்கிருந்து உள்நாட்டு விமானங்களை இயக்குவதே அவர்களின் திட்டம். இதன் மூலம் ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தின் இருபுறமும் உள்நாட்டு முனையங்கள் இருப்பது போல இருக்கும். பயணிகளும் எளிதாக விமானங்களை மாறலாம்.
முக்கிய மாற்றங்கள்: பழைய முனையத்தில் தரை தளம் கடந்த 2013ஆம் ஆண்டு முதலே பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இங்கே பாதுகாப்பு ஆய்வு நடத்தப்பட்டு, விமானச் சேவையை மீண்டும் தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இந்தத் தளம் சரக்குகளைக் கையாளும் வகையில் மாற்றியமைக்கப்படும். அங்கு 3 பேக்கேஜ் கன்வேயர்கள் அமைக்கப்பட உள்ளது. அதேபோல முதல் தளம் உள்நாட்டுப் புறப்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும்..
இது சென்னை ஏர்போர்ட்டிற்கு இந்தக் காலத்தில் தேவையான பூஸ்ட்டை கொடுக்கும். இப்போது சென்னை ஏர்போர்ட்டால் ஆண்டுக்கு 1.5 கோடி பயணிகளைக் கையாள முடிகிறது. இந்த தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டால் சென்னை ஏர்போர்ட்டால் ஆண்டுக்கு 1.9 கோடி பயணிகளைக் கையாள முடியும் என்று கூறப்படுகிறது.
அதிக விமானங்கள்: இந்த பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும் எனத் தெரிகிறது. இதன் மூலம் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வேற லெவலில் அப்டேட் ஆகும் எனத் தெரிகிறது. இதன் மூலம் வரும் காலத்தில் சென்னை ஏர்போர்ட்டில் இருந்து அதிக அளவில் விமானங்களைக் கையாள முடியும். அதன்படி வரும் நாட்களில் சென்னை ஏர்போர்ட்டால் கூடுதல் விமானங்களைக் கையாள முடியும். அதேபோல பீக் ஹவர்ஸுக்கு வெளியே சில விமானங்கள் மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிகிறது.

இப்போது சென்னை ஏர்போர்ட்டில் காலை மற்றும் மாலை பீக் ஹாவஸில் 30க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. இந்த மாற்றத்திற்குப் பிறகு சென்னை ஏர்போர்ட்டிற்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிளான் என்ன: இன்னும் பல மாற்றங்களையும் சென்னை ஏர்போர்ட்டில் செய்ய இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. பழைய சர்வதேச வருகைக் கட்டிடத்தையே முழுமையாக இடித்துவிட்டு புதிய முனையத்தைக் கட்டவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது எதிர்காலத்தில், விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு மற்றும் சேவையை மேம்படுத்த உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு ஏற்கனவே பரந்தூரில் புதிதாக விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய ஏர்போர்ட் பயன்பாட்டிற்கு வந்தாலும் பழைய ஏர்போர்ட் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மீனம்பாக்கம் ஏர்போர்ட் தொடர்ந்து திறம்படச் செயல்பட இதுபோன்ற பணிகள் முக்கியமானதாக இருக்கும்.
-
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications