"வாயில் விரலை வச்சு".. என்ன இப்படி பச்சையா பேசுறார்.. வந்த முதல்நாளே எரிச்சலை கிளப்பிய அர்ச்சனா
அர்ச்சனா கலாய்ப்பது சில நேரத்தில் எரிச்சலை தருவதாக உள்ளது
சென்னை: வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளே "சிம்ப்ளி வேஸ்ட் பீஸ்" என்ற பட்டத்தை அர்ச்சனாவுக்கு தந்து வருகிறார்கள் பிக்பாஸ் ஃபேன்ஸ்!
நேற்று முதல்நாள் போட்டியாளராக விஜே அர்ச்சான வீட்டுக்குள் நுழைந்தார்.. அவரது வருகையே அமர்க்களப்பட்டது.. டான்ஸ் ஆடிக் கொண்டே உள்ளே வந்தவர், எல்லாரிடமும் கலகலப்பாக பேசினார்.
பெரும்பாலும் டிவி பிரபலங்கள் அவருக்கு ஏற்கனவே நண்பர்கள் என்பதால், பழகுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.. எல்லாவற்றிற்கும் மேலாக அர்ச்சனாவே நன்றாக பேசக்கூடியவர்தான்.. ஆனால், இதுவே அவருக்கு மைனஸ் ஆகிவிடும் போல இருக்கிறது!
யப்பா.. சொக்கி போகும் அழகு.. சொடுக்கு போட்டு கேள்வி.. ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா.. பிக்பாஸ் கூத்து
டாஸ்க்
தன் பாணியில் அனைவரையும் கலாய்த்தார் அர்ச்சனா... பிறகு பிக்பாஸ் உங்கள் டாஸ்க்கை செய்யுங்கள் என்று சொல்லவும், அர்ச்சனா ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு பட்டம் கொடுக்கிறார். பெரும்பாலும் அனைத்துமே பொருத்தமான பட்டங்கள்தான் தரப்பட்டன என்றாலும், அர்ச்சனா சளசளவென பேசியதாகவே தெரிந்தது. முதல்நாளிலேயே ஓவர் வாய்... செம அறுவை.. என்ற முணுமுணுப்புகள் எழுந்து வருகின்றன.
சுரேஷ்
நேற்று முழுவதும் அர்ச்சனாவை பார்ப்பதற்கு, ஜீ தமிழில் நிகழ்ச்சி செய்கிறவர் போலவே தென்பட்டது.. இதேபோல, வளவளவென பேசிக் கொண்டிருந்தால், அர்ச்சனா மீது அலுப்புதான் கூடும் என்கிறார்கள் ரசிகர்கள். அதுமட்டுமல்ல, சுரேஷை குறி வைத்தே உள்ளே வந்தவர் போல தெரிகிறது. சுரேஷ் சக்கரவர்த்தி பற்றி மற்ற போட்டியாளர்களிடம் நக்கலாக பேசி அவரை கடுப்பேத்துகிறார்.
ரம்யா பாண்டியன்
அதனால் இனியும் மொக்கை கவுண்ட்டர்களை தந்து சுரேஷூக்கே டஃப் கொடுக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது. உள்ளே நுழைந்து அர்ச்சனாவின் கட்டிப்பிடி வைத்தியம் கொஞ்சம் நெருடலாக தென்பட்டது.. பிறகு ரம்யா பாண்டியனிடம் "விரலை வாயில வச்சு சப்பிட்டிருந்தியான்னு"ன்னு கேட்டது அதைவிட சற்று அதிர்ச்சியாகவும் இருந்தது.
எதிர்பார்ப்பு
முதல்நாள் வெளியான புரொமோவில் "எவன் அவன்" என்று அர்ச்சனா கேட்டபோதே, மரியாதைக்குறைவாக இவர் யாரை பேசுகிறார் என்று யோசிக்க வைத்தது. பிறகுதான் சம்பந்தமில்லாதவரை பற்றி அவர் பேசுகிறார் என்று தெரிந்தது. எனினும், அர்ச்சனா உண்மையிலேயே யாரையுமே எடுத்தெறிந்து பேச்கூடியவரா அல்லது அனுசரித்து போகக்கூடியவரா என்பது இனிமேல்தான் போக போக தெரியவரும்.