Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரங்குனு நான் யாரை சொன்னேன்.. எதற்காக திட்டினேன் தெரியுமா.. பாஜக அண்ணாமலை விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடலூரில் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

கோவை கார் வெடிப்பு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே, இறந்த முபினின் வீட்டில் எத்தனை கிலோ வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன, அவருக்கு யாருடன் தொடர்பிருக்கிறது உள்ளிட்ட விவரங்களை தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து கோவை சம்பவம் குறித்து ஆலோசனை நடத்திய அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது செந்தில் பாலாஜி, போலீஸாருக்கு முன்பே எல்லா தகவல்களையும் அண்ணாமலை சொல்கிறார்.

அண்ணாமலை

அண்ணாமலை

அப்படியென்றால் அண்ணாமலையைதான் என்ஐஏ முதலில் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். இதுகுறித்து கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கொந்தித்த அவர் மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள். நான் என்ன சொன்னேன். நீங்கள் சாப்பிடுங்கள், நான் சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்று தானே சொன்னேன்.

சாராய அமைச்சர்

சாராய அமைச்சர்

இப்படி வந்ததும் ஊரில் நாயி, பேயி, சாராயம் விக்கிறவன் சொல்றதை எல்லாம் நான் கேட்டு பதில் சொல்ல முடியாது, நகருங்க என செய்தியாளர்களையும் அமைச்சர் செந்தில்பாலாஜியையும் தரக்குறைவான வார்த்தைகளால் அண்ணாமலை விமர்சித்தார். இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அணுகுமுறை

அணுகுமுறை

இதுகுறித்து அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களுக்கும் எனக்குமான உறவு அனைவருக்கும் தெரியும். உங்களிடம் எனது அணுகுமுறை எப்படி இருக்கும் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடலூரில் ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் பத்திரிகையாளர்களுக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் காரியகர்த்தா ஒருவர் உணவு ஏற்பாடு செய்திருந்தார்.

சாப்பிட்டு வாருங்கள்

சாப்பிட்டு வாருங்கள்

எல்லாரும் போய் சாப்பிட்டு வாருங்கள் என கூறிவிட்டு நான் காரியகர்த்தாவுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது என் முன்னாள் மைக்கை நீட்டி இரு பத்திரிகையாளர்கள் சும்மா கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தார்கள். நானும் போய் சாப்பிட்டு வாங்க, நானும் சாப்பிடணும் என சொன்னேன். ஆனாலும் அவர்கள் விடாமல் கேள்வி கேட்டனர். அதனால் அவ்வாறு பேசினேன். நான் எதற்காக அப்படி பேசினேன் என மற்ற பத்திரிகையாளர்களுக்கு தெரியும்.

 திமுக ஐடி விங்

திமுக ஐடி விங்

ஆனால் திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்கள் இந்த விஷயத்தை பெரிதுப்படுத்துகிறார்கள். அண்ணாமலை பத்திரிகையாளர்களை குரங்கு என அழைத்து விட்டார், அவரை எதிர்த்து போராட்டம் செய்யுங்கள் என உசுப்பேற்றி விடுகிறார்கள் என அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அது போல் 4 நாட்கள் கழித்து கோவை கார் வெடிப்பு குறித்து என்ஐஏ விசாரணைக்கு ஏன் தமிழக அரசு தாமதமாக உத்தரவிட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+