3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பேன்.. தேர்தலுக்கு முன் - பின்.. தமிழிசை பேசியதும் நடந்ததும்
சென்னை: தென்சென்னை தொகுதியில் 2, 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறிய பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். தேர்தலுக்கு முன்பு அவர் பேசியதையும், தேர்தலுக்கு பின் நடந்ததையும் இங்கே பார்க்கலாம்.
நாடு முழுவதும் நடந்து முடிந்த 18-வது லோக்சபாவிற்கான தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி தனித்தும் என 4 முனைப் போட்டி நிலவியது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக 19 தொகுதிகளில் போட்டியிட்டு 11 ல் டெபாசிட்டை பறிகொடுத்தது.

அதேவேளையில் தென் சென்னை, வட சென்னை, கோவை, கன்னியாகுமரி, மதுரை, நீலகிரி, நெல்லை, உள்பட 12 தொகுதிகளில் பாஜக கூட்டணி 2 ஆம் இடத்தை பிடித்தது. பாஜக 2 ஆம் இடத்தை பிடித்த தொகுதிகள் பெரும்பாலும் அக்கட்சியின் ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிட்ட இடமாகும்.
குறிப்பாக ஆளுநராக இருந்து பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்த தமிழிசை சவுந்தரராஜன் தென் சென்னையில் இரண்டாம் இடம் பிடித்தார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 5,16,628 வாக்குகள் பெற்றார். 2 ஆம் இடத்தில் தமிழிசை சவுந்தரராஜன் 2,90,683 வாக்குகளை பெற்றார். தமிழச்சி தங்க பாண்டியனை விட 2,25,945 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அதிமுகவின் ஜெயவர்த்தன் மூன்றாவது இடத்தை பெற்றார்.
இதற்கிடயேதான் தேர்தல் பிரசாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசிய காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழிசை தென் சென்னை தொகுதியில் அண்ணாமலையுடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்பொது அவர் பேசுகையில், "வெற்றி பெற போவது உறுதி.. அண்ணாமலை வரும் போது என்னிடம் கேட்டார்..
அக்கா எத்தனை ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் என்று கேட்டார். நான் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறினேன். அண்ணாமலை இங்கே வந்த பிறகு சொல்கிறேன் 2, 3 லட்சமாக மாறியது. ஏனென்றால் நாமெல்லாம் லட்சதியத்திற்காக பாடுபடுகிறோம். அண்ணாமலையை நான் பாராட்டுகிறேன்.
ஏனென்றால் சாமானிய இடத்தில் இருந்து இவ்வளவு பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்றால் எவ்வளவு உழைப்பு இருக்க வேண்டும். தென் சென்னையில் உள்ள கேகே நகர் வினாயகர் கோவிலில் வைத்துதான் பாஜகவில் இணைய வேண்டும் என்று நான் முடிவு எடுத்தேன்" என்று பேசினார். தமிழிசை தற்போது 2.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ள நிலையில் இணையத்தில் மீண்டும் தமிழிசை பேசியது வைரலாகி வருகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications