‘இது மன்னிக்க முடியாத தப்பு.. கிண்டலுக்கு கூட பண்ணாதீங்க விஜய்’ – கோட் பட காட்சி; பாஜக பகீர் புகார்!
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் மக்களுக்கு வாழ்த்து சொல்லவில்லை என்று பாஜக தலைவர்கள் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில் விஜயின் கோட் படத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சி அமைத்துள்ளதாக பாஜக புகார் சொல்லியுள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நீங்கள் இனிமேல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்துள்ளீர்கள். அதனால் இப்போது வெளியாகியுள்ள 'தி கோட்' உங்களின் கடைசி படம் என்று நினைக்கிறேன். திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் போதே, அதிலிருந்து முற்றிலும் விலகி அரசியலில் ஈடுபடுவதாக அறிவி்த்துள்ளீர்கள். கமல்ஹாசனுக்கு இல்லாத துணிச்சல், உறுதி உங்களுக்கு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

'தி கோட்' படம் பார்த்தேன். இந்தப் படத்தில் ஒரு காட்சி என் மனதை மிகவும் காயப்படுத்தியது தொடர்பாக தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இப்படத்தில் செல்போன் திருடனாக நடித்துள்ள யோகிபாபுவிடம், செல்போனை பெற வேண்டும் என்பதற்காக நீங்கள் பேசும்போது, 'நான் காந்தி.' என்று உங்கள் பெயரை கூறும்பொழுது, பதிலுக்கு யோகிபாபு, 'நீ காந்தி என்றால் நான் சுபாஷ் சந்திரபோஸ்.' என்கிறார். இது இயல்பான கிண்டலாக இருக்கலாம்.
சுதந்திரம் என்ற லட்சியத்திற்காகவே மகாத்மா காந்தியும், நேதாஜி சுபாஷ் சந்திபோஸும் போராடினார்கள். ஆனால், இருவரின் பாதைகளும் வேறு வேறாக இருந்தன. அதனால் மகாத்மா காந்தியையும், நேதாஜியையும் நேர் எதிரெதிரானவர் போல காட்டியிருக்கிரீர்கள். திருடன் கதாபாத்திரத்திற்கு கிண்டலுக்காக கூட நேதாஜி பெயரை பயன்படுத்தியிருக்கக் கூடாது. இந்தியர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வருத்தப்படக்கூடிய காட்சி அமைப்பை உருவாக்கி, மன்னிக்க முடியாத தவறை தெரிந்தோ,தெரியாமலோ செய்து விட்டீர்கள்.
எவ்வித தொலைத்தொடர்பும், நவீன வசதிகளும் இல்லாத காலத்திலேயே கோடிக்கணக்கான இளைஞர்களிடம் சுதந்திரத்தீயை மூட்டியவர் நேதாஜி. அவரை தங்கள் கதாநாயகனாக, லட்சியத் தலைவராக போற்றி வணங்கி வாழ்பவர்கள் கோடிக்கணக்கில் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். நேதாஜி இல்லாமல் இருந்திருந்தால் நமக்கு சுதந்திரம் கிடைக்க இன்னும் தாமதமாகியிருக்கலாம். அவரின் பெயரைக் கொச்சைப்படுத்தும் விதமாக காட்சி அமைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தி கோட் படத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பெயர் எதிர்மறையாக பயன்படுத்தப்படாமல் நீங்களும் பட குழுவும் தவிர்த்திருக்கலாம்.
நீங்கள் நினைத்தால் இப்போது கூட அதை மாற்ற முடியும். அரசியல் களத்திற்கு வந்திருக்கும் நீங்கள் நேதாஜியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை நீங்கள் மாவீரர் சுபாஷ் சந்திரபோஸ் அவருடைய வரலாற்றை தெரிந்து இருக்க வில்லை என்றால், சில விஷயங்களை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய தேச விடுதலைக்கான அறவழிப் போராட்டம் காந்தியடிகள் தலைமையில் நடந்தபோது, இந்திய மக்கள் படும் துயரைக் கண்டு இந்திய தேசிய ராணுவம் அமைத்து ஆயுதப் போராட்டத்தை நடத்தியவர் சுபாஷ் சந்திர போஸ். தனது தலைமையில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, உலகெங்கும் உள்ள பாரத மக்களின் ஆதரவுடன், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை பலமாக கட்டமைத்தார்.
பிரிட்டிஷ் இந்தியாவுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தது நம் தமிழினம், தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் மிகப்பெரிய ஆளுமையுடன் பல்வேறு தொழில்களில் வெற்றிக் கொடி உருவாக்கியிருந்தனர்.
ஆனால் அனைத்தையும் துறந்து இந்திய தாய் திருநாட்டின் விடுதலைக்காக வீரத்துடன் மாவீரர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் பிரிட்டிஷ் ஏகதிபத்தியத்தை எதிர்த்து பல்லாயிரக்கணக்கில் சிறை சென்றனர், போரில் வீர மரணம் அடைந்தனர் என்பதை நம் சந்ததியினருக்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.
-
நக்கீரன் கோபால் அப்பவே சொன்னாரே.. கரூரில் நடந்தது உண்மையில் என்ன? ட்ரோன் காட்சிகள் உண்மையா? -
சிம்பு விஜய்யை காலி பண்ணி இருப்பாரு.. ரஜினி ஒரு வார்த்தை சொன்னால் வேற மாதிரி ஆகிடும்..! பிரபலம் ஆதங்கம் -
"விசில்" நம் தேசிய கீதம்.. மேடையில் ஓப்பனாக பேசிய ஓ.பன்னீர்செல்வம் -
நடிப்புக்கு டாட்டா சொன்ன விஜய்.. மலையாளத்திற்கு மாற்ற துடிக்கும் நடிகை.. ரசிகர்கள் வைக்கும் ஒரே கோரிக்கை -
சிபிஐயிடம் வசமாக சிக்கிய விஜய்? பிரசார வாகனம் 20 மீட்டர் தள்ளிப்போனது ஏன்? கரூர் நெரிசலில் ட்விஸ்ட் -
சங்கீதாவால் வந்த சட்டச் சிக்கல்.. விஜய்யின் வேட்புமனு தள்ளுபடியாக வாய்ப்பு? வெளியான ஷாக் பின்னணி! -
நடத்தை விதி வந்தால்.. வெளியே வருவாருன்னு சொன்னீங்களே.. வீட்டுக்குள் விஜய்... விழிபிதுங்கும் தம்பிகள் -
தவெக இஃப்தார் விருந்து நிகழ்ச்சி.. இன்று நாள் முழுவதும் நோன்பு வைக்கும் விஜய் -
காலை முதல் நோன்பு கடைபிடித்த விஜய்.. குல்லா அணிந்து இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்பு! -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
திமுகவை திணறடிக்க திட்டம் போடும் சிபிஐ.. பாஜக மெகா பிளான்.. மிகப்பெரிய அரசியல் ட்விஸ்ட் வருது -
Election Exclusive: விஜய் தனியா நிக்குறாரு..ஏன்? ஏன்னா யாருமே வரலை! பனையூரைச் சுற்றி மர்ம சுவர்! தலைகளின் தகிடு தத்தோம்!












Click it and Unblock the Notifications