சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்... அப்போ சாமிக்கு முன்னாடி இல்லையா... சீமான் கடும் தாக்கு
Recommended Video

சென்னை: அயோத்தியில் ராமல் கோவில், கேரளாவில் அய்யப்பன் கோவில்களை வைத்து பாஜக இழிவான அரசியலில் ஈடுபடுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; பெண்களை போற்றாத சமூகம் பெருமை அடைந்தது இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றால், சாமிக்கு முன் இல்லையா என்று கூறினார்.

மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் பெண்கள் சாமி தரிசனம் செய்யலாம். ஆனால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் சாமி தரிசனம் செய்யக் கூடாதா என்று கேள்வி எழுப்பினார். திருப்பதி வெங்கடாசலபதி கோவில், சிவன் கோவில்களில் பெண்களுக்கு அனுமதி உள்ளது.
அய்யப்பன் கன்னி சாமி என்றால், பிள்ளையார், அனுமான் கோவில்களில் ஏன் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும். பெண்களை விட புனிதம் வேறு இல்லை.
மேலும், அயோத்தியில் ராமர் கோவிலை போன்று, கேரளாவின் சபரிமலையில் அய்யப்பன் கோவிலை பிடித்து பாஜக தொங்குகிறது என்று அவர் கடுமையாக தாக்கி பேசினார்.












Click it and Unblock the Notifications