பாஜக 'மவுன' விரதம்- முடித்து வைக்கும் பிஎல் சந்தோஷ்! அதிமுக உறவு முறிவு-அண்ணாமலையுடன் அதிரடி ஆலோசனை!
சென்னை: அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்ட நிலையில் பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் இன்று சென்னை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக தீர்மானம் நிறைவேற்றியது. 2024 லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுக தலைமையில் தனி கூட்டணி உருவாக்கப்படும் என அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

டெல்லி போட்ட வாய்ப்பூட்டு: அதிமுகவின் இந்த திட்டவட்டமாக நிலைப்பாட்டை பாஜக தலைவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் நிலைப்பாடுகளால்தான் கூட்டணியை அதிமுக முறித்தது. ஆனாலும் அண்ணாமலை உட்பட தமிழ்நாடு பாஜக தலைவர்கள் யாரும் அதிமுக கூட்டணியை முறித்தது தொடர்பாக எதுவுமே பேசக் கூடாது என கட்டளை பிறப்பித்தது டெல்லி மேலிடம். இதனை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் யூ டியூப் சேனல் பேட்டி ஒன்றில் உறுதி செய்திருந்தார்.
அண்ணாமலைக்கு பாராட்டு: அந்த சூழலில் டெல்லி சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மேலிடத்தில் தமிழ்நாடு குறித்தி சில பல தகவல்களை கொடுத்ததாகவும் அதனால் அண்ணாமலையின் நடவடிக்கைகளை மேலிடம் பாராட்டியதாகவும் தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் உள்ளிட்டோர் ஊடகப் பேட்டிகளில் தெரிவிக்கின்றனர்.

பிஎல் சந்தோஷ் வருகிறார்: தற்போது பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் இன்று சென்னை வருகை தர உள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக கூட்டணி முறிவு, புதிய கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்த இருக்கிறாராம் பிஎல் சந்தோஷ்.
மவுன விரதம் முடித்து வைப்பு?: இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களையும் பிஎல் சந்தோஷ் சந்தித்து பேசக் கூடும் எனவும் கூறப்படுகிறது. அப்படி செய்தியாளர்களை சந்தித்தால் அதிமுக கூட்டணி முறிவு குறித்து கருத்து தெரிவித்தாக வேண்டும். இதுவரை தமிழ்நாடு பாஜக தலைவர்கள் கடைபிடித்து வரும் மவுன விரதத்தை பிஎல் சந்தோஷ் முடித்து வைத்தால் இனி பகிரங்கமாக அதிமுக தலைவர்களை பாஜக தலைவர்கள் விமர்சிக்கவும் தொடங்குவர் எனவும் கூறப்படுகிறது. இதனால் பிஎல் சந்தோஷின் சென்னை பயணத்தை பாஜக தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்?












Click it and Unblock the Notifications