கட்சிக்கு வேலை பாக்குறார்னு நெனைச்சா.. “செந்தாமரையில் சேறு”.. சிடிஆர் நிர்மல் மீது பாய்ந்த நாகராஜன்!
பாஜகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல் குமாரை கடுமையாக அட்டாக் செய்துள்ளார் கரு.நாகராஜன்.
சென்னை : சிடிஆர் நிர்மல் குமார் கட்சியை விட்டுப் பிரியும் நேரத்தில், செந்தாமரை மீது சேறு பூசிச் செல்லும் செயலால், தன்னை சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் என பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜகவின் ஐடி விங் மாநில தலைவராகப் பணியாற்றி வந்த சிடிஆர் நிர்மல் குமார், அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து, அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்சிப்பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறார் என்று நாங்கள் நினைத்து கொண்டிருந்த நேரத்தில், அவர் குழப்பத்தில் இருந்திருக்கிறார் என கரு நாகராஜன் விமர்சித்துள்ளார்.

செருப்பாக பயன்படுத்தி
பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். தனது விலகல் தொடர்பாக நிர்மல் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்துள்ளார். தமிழ்நாடு பாஜக, தலைமை தொண்டர்களையும், கட்சியையும், செருப்பாகப் பயன்படுத்தி, கட்சியைப் பற்றி துளியும் சிந்திக்காது, சொந்தக் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதைப் போன்ற அல்பத்தனம், எதுவும் இல்லை எனக் கடுமையாகச் சாடியுள்ளார் சிடிஆர் நிர்மல் குமார்.

அட்டாக்
இந்நிலையில், கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்துள்ள சிடிஆர் நிர்மல் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, எங்கு சென்றாலும் அவரது பணி சிறக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், பாஜகவினர் சிடிஆர் நிர்மல் குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் சிடிஆர் நிர்மல் குமாரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கட்சிக்கு வேலை பார்க்கிறார்னு நெனைச்சா
இதுதொடர்பாக கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜகவில் இருந்து பிரிந்து சென்றிருக்கும் நிர்மல் குமார் விடுத்திருந்த அறிக்கையைப் படித்தேன். கடந்த ஒன்றை ஆண்டுகளாக கட்சிப் பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறார் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவர் குழப்பத்தில் இருந்திருக்கிறார் என்பது அவருடைய பிரிவு செய்தியில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. நம் பாஜக போன்ற தேசியத்திற்காகவும் தேச முன்னேற்றத்திற்காகவும் மட்டும் பாடுபடும்.

செந்தாமரை மீது சேறு
கட்சியிலே, தனிநபரின் முன்னேற்றத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட கட்சியே முன்னிறுத்தப்படுகிறது. எந்தக் கட்சியில் சார்ந்து இருக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கும் முழு உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் கட்சியை விட்டுப் பிரியும் நேரத்தில், செந்தாமரை மீது சேறு பூசிச் செல்லும் செயலால், தன்னை சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். பிரிந்து செல்லும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நன்றாக இருக்கட்டும் என்று நினைக்கும் பெருந்தன்மையைப் பெற்றவர் நம் மாநிலத் தலைவர் அண்ணாமலை.

பரவசமும் இல்லை, துக்கமும் இல்லை
நம் மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டுக்களால் பரவசப்படுவதும் இல்லை. தூற்றுபவர்களை கண்டு துக்கப்படுவதும் இல்லை. நம் மாநிலத் தலைவரின் தன்னலமற்ற தியாகமும் ஓய்வறியாத உழைப்பும் மாற்று குறையாத உற்சாகமும், தொண்டர்களிடம் காட்டும் தோழமையும் மக்கள் பிரச்சினைகள் மீது காட்டும் அக்கறையும். விறுவிறுப்பான அணுகுமுறையும், விவேகமான ஆளுமையும் துடிப்பான செயல் திறமும் தமிழ் நாட்டு மக்களை கவர்ந்து இழுத்து இருக்கிறது.

புரவிப் பாய்ச்சல்
படிப்படியாக வளர்ந்து வரும் பாரதிய ஜனதா கட்சி தற்போது புரவிப் பாய்ச்சலில் இருப்பதை நாட்டு மக்கள் நன்றாக புரித்து கொண்டிருக்கிறார்கள் அதுபோல தன் சொந்த நலனுக்காக அவதூறு பரப்புகிறவர்களையும் மக்கள் அடையாளம் காண்பார்கள்" என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். பாஜகவில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை மீது குற்றம்சாட்டிவிட்டு வெளியேறி வருவது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீனியர்களை கழற்றிவிடும் பாஜக? தமிழகத்தில் புதுமுகங்களை களமிறக்க திட்டம்.. பின்னணியில் 3 காரணம் -
எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிவிட்டாரே! கஷ்டப்பட்டு சிரிக்கிறார்! அண்ணாமலை உருக்கம்! -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத்












Click it and Unblock the Notifications