பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா.. தனியார் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா காரணமாக 4,22,085 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் இல.கணேசன் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழகத்தில் அதிமுக அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள், திமுக எம்எல்ஏக்கள் என்று பலர் வரிசையாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன், காங்கிரஸ் எம்பி வசந்த குமார் மரணம் அடைந்தனர்.
தமிழகத்தில் இப்படி அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications