பூச்சின்னு நினைச்சு பாஜக எம்எல்ஏ காந்தி கையை தட்டிவிட்டுடார்! நடந்தது என்ன?- விபி துரைசாமி விளக்கம்
சென்னை : தனது கையை பூச்சி என்று நினைத்து பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி தட்டி விட்டதாக பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு மாநில பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் வணக்கம் சொல்லி வி.பி.துரைசாமி பேசத் தொடங்கியபோது அண்ணாமலை தாமதமாக போராட்டத்துக்கு வந்துள்ளார். அந்த சமயம் துரைசாமியின் பேச்சை இடைமறிக்கும் வகையில், மற்றொரு மைக்கில் பாஜக நிர்வாகி ஒருவர் அண்ணாமலை வருகிறார், வந்துகொண்டே இருக்கிறார் எனக்கூறியது வி.பி.துரைசாமிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

பாரத் மாதா கி ஜே முழக்கம்
வி.பி.துரைசாமி மீண்டும் பேச்சை தொடங்க முற்பட்டபோது கீழே நின்றுகொண்டிருந்த பாஜக தொண்டர்கள் பாரத் மாதா கீ ஜே என முழக்கமிடத் தொடங்கினர். இதனால், அருகில் நின்ற நாராயணனிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் துரைசாமி. கோஷம் நின்றபிறகு துரைசாமியை பேச சொல்லி இருக்கின்றனர்.

அசிங்கமா இருக்கு!
அப்போது அவர், "வேறு யாராவது வருவார்கள். எல்லோரும் வந்தபின் பேசலாம். எனக்கு அசிங்கமாக இருக்கிறது" என கூறினார்." மீண்டும் ஒரு நிர்வாகி பேச சொன்னபோது, "என்ன மிரட்டுகிறீர்களா?" எனக்கூறியது அங்கிருந்த கேமராக்களிலும் பதிவானது. பின்னர் மேடைக்கு வந்த அண்ணாமலையிடம் "நான் மட்டும்தான் இன்னும் பேசவில்லை, பேசட்டுமா?" என அனுமதி கேட்டார் வி.பி.துரைசாமி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளானது.

எம்.ஆர்.காந்தியால் தட்டிவிடப்பட்ட துரைசாமி கைது
இதனிடையே அதே போராட்ட மேடையில் எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவும் வைரலாகி வருகிறது. அதில், நாராயணன் திருப்பதி மக்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டு இருந்தபோது அவர் அருகே நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி நின்றுகொண்டு இருந்தார். அவருக்கு பின்னால் வி.பி.துரைசாமி நின்றிருந்தார்.
இந்த நிலையில், அப்போது எம்.ஆர்.காந்தியின் வலதுதோள் பட்டை மீது லேசாக வி.பி.துரைசாமியின் கை பட்டது. உடனே எம்.ஆர்.காந்தி சட்டையை தூக்கி லேசாக தட்டி விடுகிறார். அதன் பின்னர் இடது பக்க தோளில் வி.பி.துரைசாமி கைவைக்கிறார். ஆத்திரமடைந்த எம்.ஆர்.காந்தி போராட்ட மேடை என்றும் பார்க்காமல் வி.பி.துரைசாமியின் கையை அடித்து தட்டிவிடுகிறார். இதனால் வி.பி.துரைசாமியின் முகம் மாறுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புதிய விளக்கமளித்த துரைசாமி
பாஜக மேடையில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஏபிபி ஊடகத்துக்கு தொலைபேசி வாயிலாக விளக்கமளித்த துரைசாமி, கட்சியில் தனக்கு உரிய மரியாதை தரப்படுவதாகவும் மேடை நாகரீகம் அறியாதவர்களால் அப்படி பேசிவிட்டதாகவும்
கூறினார். எம்.ஆர்.காந்தி கையை தட்டிவிட்டது குறித்து கூறிய அவர், "ஏதோ
பூச்சி அமர்ந்துள்ளது என்று நினைத்துதான் எம்.ஆர்.காந்தி எனது கையை தட்டிவிட்டார். அவர் என் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்.
சட்டப்பேரவையில் எப்படி பேசுவது என்பது குறித்து நான் அவருக்கு
வகுப்பெடுத்து வருகிறேன்." என்றார்.

அரசியலில் கொடிகட்டிப் பறந்த துரைசாமி
திமுகவில் துணை பொதுச் செயலாளராகவும், 2 முறை துணை சபாநாயகராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த வி.பி.துரைசாமி, திமுகவில் சாதி பாகுபாடு இருப்பதாக குற்றம்சாட்டி கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அப்போது, அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த எல்.முருகனை மாநில பாஜக தலைவராக தேர்ந்தெடுத்ததால் அக்கட்சியில் இணைவதாக கூறினார் வி.பி.துரைசாமி.
-
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
அவினாசி எல்.முருகன், சாத்தூர் நயினார், பல்லடம் அண்ணாமலை.. கமலாலயத்தில் ரெடியான பாஜக வேட்பாளர் லிஸ்ட் -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
அவிநாசியில் எல்.முருகன்..சிங்காநல்லூரில் அண்ணாமலை.. நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை..பரபரக்கும் கமலாலயம் -
ஐபிஎஸ் VS ஐபிஎஸ்.. பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டி? பாஜகவின் கையில் பெரிய பிளான் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications