ஆளுநருக்கு விருப்பு வெறுப்பு கிடையாது! விஜய் விவகாரம் குறித்து.. வானதி சீனிவாசன் கொடுத்த விளக்கம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தனிபெரும் கட்சியாக விஜய் உருவெடுத்திருந்தாலும், அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைக்கவில்லை. ஆளுநர் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக காங்கிரஸ் விமர்சித்திருக்கும் நிலையில் பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், "அளுநருக்கு விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது. அவர் அரசியலமைப்பு சட்டப்படிதான் நடந்துக்கொள்கிறார். அவர் கேட்பதெல்லாம் மெஜாரிட்டி நம்பர்தான்" என்று கூறியிருக்கிறார்.

ஆனால், மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டியது சட்டமன்றம்தானே தவிர, ஆளுநர் மாளிகை கிடையாது என்று காங்கிரஸ் ஆளுநரின் செயல்பாட்டை கண்டித்திருக்கிறது. ஆளுநரை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications