பிரதமர் மோடியை இழிவாக பேசிய திமுக நிர்வாகி பகிரங்க மன்னிப்பு கேட்கணும் - நயினார் நாகேந்திரன் காட்டம்
சென்னை: பிரதமர் மோடியை பொது மேடையில் இழிவுபடுத்தியதற்கு திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் காசிமுத்து மாணிக்கம் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம், ஜியான் தியேட்டர் அருகில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நல்லசிவம், ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ, வடக்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மகாலிங்கம், மாநில நெசவாளர் அணி செயலாளர் சித்து ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் திமுக வர்த்தகர் அணி மாநிலச்செயலாளர் காசிமுத்துமாணிக்கம் பங்கேற்றுப் பேசினார்.

திமுக வர்த்தகர் அணி மாநிலச்செயலாளர் காசிமுத்து மாணிக்கம் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜக இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி பற்றி கொச்சையாகப் பேசிய காசிமுத்து மாணிக்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அரசியல் நாகரிகமற்ற அறிவாலயம் விரைவில் அழியும். ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்வில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறித்து திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் காசி முத்து மாணிக்கம் ஆட்சேபிக்கத்தக்க வகையில் கொச்சையாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தேசத்தின் உயரிய பதவியில் இருக்கும் தலைவரைக் குறித்து பொது மேடையில் மலினமாகப் பேசுவதும், அதனை மேடையில் இருப்போரும், சுற்றி இருப்போரும் கைத்தட்டிச் சிரித்து ரசிப்பதும் ஒட்டுமொத்த திமுக உடன்பிறப்புகளின் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது.
பிரதமரைக் குறித்து தகாத வார்த்தையில் பேசுவதில் தொடங்கி பிரதமருக்குக் கொலை மிரட்டல் விடுப்பது வரை தொடர்ந்து அரசியல் மாண்பின் எல்லையை மீறி நடந்து கொள்ளும் திமுகவின் கீழ்த்தரமான போக்கை, இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது! பிரதமரை இழிவுபடுத்தியதற்கு திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
உலகமே போற்றும் தலைவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கொச்சையாகத் தூற்றும் திமுக மொத்தமாக அழியும் நாள் தூரமில்லை!" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார் நயினார் நாகேந்திரன்.
-
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
அண்ணாமலை பெயரும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருக்கு.. மையக்குழு கூட்டத்துக்கு பின் உறுதி செய்த நயினார்! -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications