நாகாலாந்தில் மீண்டும் மலரும் தாமரை..பாஜக ஆட்சி.. Matrize எக்ஸிட் போல் ரிசல்ட்
நாகாலாந்தின் 60 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
நாகாலாந்தின் 60 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நாகலாந்து மாநிலத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான, நாகாலாந்து மாநிலத்தில் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஓய்ந்த நிலையில் இன்று திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாகலாந்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலத்தில் அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.
அங்குள்ள அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளர் கஜேடோ கினிமி போட்டியின்றி தேர்வானார். வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
நாகாலாந்தில் 82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இரண்டு மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 4.30 மணியளவில் நிறைவுபெற்றது.
நாகாலாந்தில் இன்றைய தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மார்ச் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. நாகலாந்து மாநிலத்தில் பாஜக மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என Matrize எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
நாகாலாந்து - Matrize எக்ஸிட் போல் முடிவுகள்:
பாஜக கூட்டணி: 35-43
என்பிஎப் 3-5
காங்கிரஸ் 1-3












Click it and Unblock the Notifications