Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வரின் துபாய் பயணம் பற்றி பாஜக நிர்வாகி வதந்தி.. ஸ்கிரீன் ஷாட் போட்ட பிடிஆர்.. தூக்கியது போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் தொடர்பாக சர்ச்சை கருத்து பதிவிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வரின் பயணம் பற்றி வதந்தி பரப்பியதாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி சென்று இருந்தார். கடந்த நான்கு நாட்களாக பல்வேறு சந்திப்புகள், கூட்டங்களை முதல்வர் ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபியில் நடத்தினார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை சென்னைக்கு திரும்பினார். சென்னையில் இன்று அதிகாலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு முதலீடுகள், துபாய், அபுதாபி பயணத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து பேசினார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில் அதுகுறித்து நிறைய வதந்திகள் இணையத்தில் பரப்பப்பட்டது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் தனது தனி விமானத்திற்கு அரசின் பல கோடிகளை செலவிட்டதாக இணையத்தில் வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால் அமைச்சர் தங்கம் தென்னரசோ, இது திமுகவின் கட்சி காசு, தனி விமானத்திற்கு அரசு பணத்தை பயன்படுத்தவில்லை. விமானம் கிடைக்கவில்லை என்பதால் தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளோம் என்று கூறினார்.

ஸ்டாலின் ஜாக்கெட்

ஸ்டாலின் ஜாக்கெட்

இந்த நிலையில்தான் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி செயலாளர் அருள் பிரசாத் என்பவர் முதல்வர் ஸ்டாலினின் உடை குறித்து வதந்தி பரப்பி இருந்தார். முதல்வர் ஸ்டாலின் அணிந்து இருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி ரூபாய் என்று பொய்யாக ட்வீட் செய்து இருந்தார். செய்தி நிறுவனம் ஒன்றின் கார்டை எடிட் செய்து அதில் முதல்வரின் ஜாக்கெட் 17 கோடி ரூபாய் என்று அமைச்சர் பிடிஆர் தெரிவித்ததாக பொய்யாக டைப் செய்து வதந்தி பரப்பி இருந்தார். இதை பலரும் ஷேர் செய்திருந்தனர்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் புகார்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் புகார்

இதையடுத்து இந்த பாஜக நிர்வாகி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் புகாரும் அளித்து இருந்தார். அதில், தமிழ்நாடு காவல்துறையின் புதிய சமூக ஊடக மையத்திற்கு இது முதல் சமர்ப்பிப்பாக இருக்கலாம். வடிகட்டப்பட்ட முட்டாள் இது போன்ற முட்டாள்தனத்தை வெளிப்படையாக இடுகையிடுவதால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை. சங்கிகள் வாட்ஸ்அப் விஷயத்தைத் தாண்டிச் செல்லக் கூடாதா என்று கடுமையாக கேள்வி எழுப்பி இருந்தார்.

பாஜக நிர்வாகி

பாஜக நிர்வாகி

இந்த நிலையில்தான் தற்போது பாஜக நிர்வாகி அருள் பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். பிடிஆரின் புகாரை தொடர்ந்து, பொய்யான செய்தியை பரப்பி அவதூறு செய்ததாக கூறி பாஜக நிர்வாகி அருள் பிரசாத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பிரச்சாரங்களை தடுக்க 'சமூக ஊடக சிறப்பு மையம்' அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட நிலையில்தான் தற்போது பாஜக நிர்வாகி கைதாகி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+