செந்தில் பாலாஜிக்கு கேட்டாங்களே.. நோட்டீஸ் வழங்காமல் எஸ்ஜி சூர்யா கைது ஏன்? நாராயணன் திருப்பதி கோபம்
சென்னை: செந்தில் பாலாஜி என்ன சாதாரணமானவரா? ஓடிப் போய் விடுவாரா? Crpc 141ஏ ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டதா? என்றெல்லாம் கேட்டவர்கள், எஸ்.ஜி சூர்யாவை விசாரணை செய்யாமல், சட்ட விரோதமாக கைது செய்தது ஏன்? என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக பதவி வகித்து வருபவர் எஸ்.ஜி சூர்யா. அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் எஸ்.ஜி சூர்யா ட்விட்டர், சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்படக்கூடியவர். தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், 'கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் எனவும் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த பாஜக நிர்வாகி எஸ்.ஜி சூர்யாவை, காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரை இரவோடு இரவாக மதுரைக்கு அழைத்துச் சென்றனர். எஸ்.ஜி சூர்யா கைதை அறிந்த பாஜகவினர் சென்னை எழும்பூரில் உள்ள காவல் ஆணையரகம் அலுவலகம் முன்பாக குவிந்தனர். எதற்காக அவரை கைது செய்தீர்கள்? யார் அவரை கைது செய்தார்கள் என்று கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட அவர்கள் கலைந்து சென்றனர். எஸ்.ஜி சூர்யா கைதுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் கொந்தளித்து வருகின்றனர்.
அந்த வகையில், பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ். ஜி. சூர்யா கைது செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கைது என்ற பெயரில் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக தெரிகிறது. செந்தில் பாலாஜி என்ன சாதாரமானவரா? ஓடிப் போய் விடுவாரா? Crpc 141ஏ ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டதா? என்றெல்லாம் கேட்டவர்கள், உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் படி சூர்யாவின் Crpc 141ஏ ன் கீழ் அறிவிக்கை அளித்து விசாரணை செய்யாமல், சட்ட விரோதமாக கைது செய்தது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை மனித நேயமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும் சட்ட விதிகளை உரிய முறையில் பின்பற்றாமல் கைது செய்ததாகவும் முதல்வர் மு.க ஸ்டாலின் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், செந்தில் பாலாஜி கைதுக்கு அத்தனை கேள்வி கேட்டவர்கள் எஸ்.ஜி சூர்யாவை நோட்டீஸ் வழங்காமல் கைது செய்தது ஏன் என்று நாரயணன் திருப்பதி விமர்சித்து இருக்கிறார்.
-
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications