திமுக Vs பாஜகவா? அப்போ ஈரோடு கிழக்கில் அண்ணாமலை களமாடியிருக்கணுமே? ஏன் மறுத்தார்? கு.ப.கிருஷ்ணன்
சென்னை: திமுக வெர்சஸ் பாஜக என்றால் ஈரோடு இடைத்தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை களமாடியிருக்கலாமே என ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் ஒரு தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், இரட்டை இலை விவகாரத்தில் நாங்கள் என்ன எதிர்பார்த்தோமோ அதை உச்சநீதிமன்றம் கொடுத்துள்ளது. அவர்கள் அணி, இவர்கள் அணி என இல்லாமல் எம்ஜிஆர் கொண்டு வந்த இரட்டை இலையும் ஜெயலலிதா கட்டிக் காத்த இரட்டை இலையும் பறிபோய்விட கூடாது என்பது எங்கள் விருப்பம்.
இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே முடிசூட்டி கொண்டார். ஒரு கட்சியின் தலைமைதான் ஒரு வேட்பாளரை தேர்வு செய்து அதற்கான படிவம் அ, ஆ ஆகியவற்றில் கையெழுத்திட்டு தருவார்கள். 99 சதவீதம் பேர் பொதுக் குழுவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக உள்ளனர்.

எம்ஜிஆர்
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அப்போது பொதுக் குழு உறுப்பினர்களுக்கு செலவுக்கு பணம் கொடுத்து முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வாக்களிக்குமாறு கூறினார். ஆனால் அதே பொதுக் குழு ஒரு கட்டத்தில் எம்ஜிஆரை கட்சியிலிருந்தே நீக்கினர். இதையடுத்துதான் அடிப்படை தொண்டர்கள்தான் கட்சியின் தலைமையை தேர்வு செய்ய வேண்டும் என்ற ஒரு விதியை வகுத்தார்.

எடப்பாடி பழனிசாமி
ஒவ்வொரு முறையும் எடப்பாடி பழனிசாமியை நான் பார்க்கும் போதெல்லாம் கூறுவேன், அண்ணே வேண்டாம்ணே, இரட்டை இலை முடங்குவதற்கு நீங்கள் காரணமாகிவிடாதீர் என்றேன். அப்போது முன்னாள் அமைச்சர் செம்மலை சொன்னார், விவாகரத்து ஆகிவிட்டது. இனி குடும்பம் நடத்த முடியாது என்றார். அதற்கு நான் சொன்னேன், எத்தனையோ பேர் விவாகரத்து ஆனவர்கள் மகன், மகள் திருமணத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளார்கள். ஏன் கூடி இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா என கேட்டேன். ஆனால் இன்று எப்படியோ இரட்டை இலை கட்டி காப்பாற்றப்பட்டாகிவிட்டது.

இடைக்கால பொதுச் செயலாளர்
இனி இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி தன்னை தானே கூறிக் கொள்ள முடியாது. இரட்டை இலை வெற்றிக்காக ஓபிஎஸ், அவருடன் இருக்கும் நிர்வாகிகள், அவரது தொண்டர்கள், தொகுதி மக்கள் என அனைவருமே பாடுபடுவார்கள். இரட்டை இலை சின்னத்துக்காக ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ய போவார். இரட்டை இலை சின்னத்திற்காக சசிகலாவுக்கு எங்களுடன் துணை நிற்கட்டுமே.

தாமரை சின்னம்
தாமரை சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடட்டும் என பாஜக சொல்லவே இல்லை, நாங்களும் சொல்லவே இல்லை. அதிமுகதான் பாமகவுக்கு அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தது. அது போல் மதிமுகவுக்கு அங்கீகாரம் பெற்று தந்தது. பல கட்சிகள் வளர்வதற்கு மரமாக, நிழலாக, நீராக இருந்த கட்சி அதிமுக. பாஜக மட்டுமில்லை எந்த கட்சியும் சொல்வதை கேட்கும் நிலையில் நாங்கள் இல்லை.

இரு வீட்டுக்கு இடையே சண்டை
இரு வீட்டுக்கு இடையே சண்டை வந்தால் பக்கத்து வீட்டுக்காரர் மத்தியஸ்தம் செய்ய வருவார். அது போல்தான் எங்கள் இரு அணிகளுக்கு இடையே சண்டை வந்த போது பாஜக மத்தியஸ்தம் செய்ய வந்தது. ஆனால் நீங்கள் கேட்பது போல் பாஜகவில் பிரச்சினை என்றால் நாங்கள் நாகரீகமாக இருந்து கொள்வோம். தமிழ்நாடு திராவிட பூமி. பாஜக எங்களை கட்டுப்படுத்த முடியாது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியால் இந்தியாவை உலக நாடுகளே திரும்பி பார்க்கின்றன. அவரை நாங்கள் மதிக்கிறோம். அதற்காக எங்களை ஏறி மிதிக்க அனுமதிக்க மாட்டோம்.

திமுக வெர்சஸ் பாஜக
திமுக வெர்சஸ் பாஜக என சொல்லிக் கொண்டால் போதுமா, அண்ணாமலை களமாடி பார்த்திருக்க வேண்டும். அவர்தான் மாட்டேன் என கூறிவிட்டாரே. தேசிய அளவில் காங்கிரஸ் வெர்சஸ் பாஜக என இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அக்கட்சியை எதிர்த்து பாஜக போட்டியிட்டு வென்றிருந்தால் அது நாடாளுமன்றத் தேர்தலுக்கு உதவியாக இருந்திருக்கும். பிரதமர் மோடியையும் ஜே பி நட்டாவையும் மதிக்கிறோம். அதற்காக நாங்கள் அண்ணாமலைக்கு அடிமைகள் அல்ல. இவ்வாறு கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார்.
-
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications