பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலைக்கு.. கொரோனா வைரஸ் தொற்று.. மருத்துவமனையில் அனுமதி
சென்னை: பாஜக மாநிலத் துணைத் தலைவரும் அரவக்குறிச்சி வேட்பாளருமான அண்ணாமலைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த வாரம் தான் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் களத்தில் அமைதி திரும்புவதற்குள் மறுபுறம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாகத் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. பேருந்து பயணங்களில் கட்டுப்பாடு வெளிநாட்டுப் பயணிகளுக்கு இபாஸ், திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் எனப் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று அமலுக்கு வந்தது.
இந்நிலையில், பாஜக மாநிலத் துணைத் தலைவரும் அரவக்குறிச்சி வேட்பாளருமான அண்ணாமலைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் மற்றும் துரை முருகனின் சகோதரர் துரை சிங்காரம் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications