தமிழகத்தில் திட்டமிட்டபடி பாஜக தலைவர் முருகனின் வேல் யாத்திரை தொடங்கும்: வி.பி. துரைசாமி
சென்னை: தமிழகத்தில் திட்டமிட்டபடி பாஜக தலைவர் முருகனின் வேல் யாத்திரை தொடங்கும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி தெரிவித்துள்ளார்.
திருத்தணியில் இருந்து இன்று முதல் 1 மாத காலத்துக்கு வேல் யாத்திரை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்திருந்தார். இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி தரவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் திருத்தணியில் வேல் யாத்திரை தொடக்க விழாவுக்கு பாஜகவினர் அமைத்த மேடைகளை போலீசார் அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறுகையில், வேல் யாத்திரைக்கான தமிழக அரசின் தடை சட்டவிரோதமானது. அதிமுகவுடன் கூட்டணி என்பது வேறு; வேல் யாத்திரை என்பது வேறு.
திருத்தணியில் இருந்து திட்டமிட்டபடி இன்று வேல்யாத்திரை தொடங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications