ஈசிஆர் ஹோட்டலில் பகீர்.. பாஜக பெண் பிரமுகருக்கு ஆபாச மெசேஜ்.. நடுரோட்டில் நடந்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : பைக் ரேஸரும், பாஜக நிர்வாகியுமான அலிஷா அப்துல்லாவுக்கு ஒரு ஆண் பாலியல் சீண்டல் கொடுத்துள்ளார். காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் அந்த நபரை அலிஷாவே தன் காரில் சிறைபிடித்து வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் அம்பலப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் அவர் அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துள்ளார்.

பிரபல பைக் மற்றும் ரேஸரான அலிஷா அப்துல்லா, கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தற்போது தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன்மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளராகவும் உள்ளார். ஏற்கனவே திருச்சி சூர்யா அவரை விமர்சித்தபோது பதிலடி கொடுத்திருந்தார்.

bjp alisha abdullah

இந்நிலையில் அலிஷா அப்துல்லா தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் நான் இப்போது பாதிக்கப்பட்ட பெண்ணாக இங்கு நின்று கொண்டிருக்கிறேன். ஃபெரோஸ் என்ற நபர் என்னிடம் தகாத வார்த்தைகளில் பேசி படுக்கைக்கு அழைக்கிறார். ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் வேறு ஏதாவது காவல்நிலையம் சென்று புகாரளியுங்கள் என்று கூறுகிறார்கள். இவனை நானே அம்பலப்படுத்த வேண்டும் என்று இங்கு அழைத்துள்ளேன். பாருங்கள் அவன் கூலர்ஸ் அணிந்து காரில் பந்தாவாக அமர்ந்து கொண்டிருக்கிறான். பெண்கள் இதுபோன்ற ஆண்களை சும்மா விடக்கூடாது என்று கூறியுள்ளார்.

அந்த வீடியோவில் அலிஷா தன்னிடம் பாலியல் சீண்டலில் பேசிய ஃபெரோஸ் மற்றும் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினரையும் காட்டியுள்ளார். காரில் பந்தாவாக அமர்ந்திருந்த ஃபெரோஸின் தலையில் ஒரு அடியும் வைத்தார்.

இதுகுறித்து தன் பதிவில் மேலும் விரிவாக குறிப்பிட்டுள்ள அலிஷா, இந்த நபர் எனக்கு போன் செய்தும், மெசேஜ் அனுப்பியும் படுக்கைக்கு அழைக்கிறான் பாடி மசாஜ் செய்ய வேண்டும் என்றெல்லாம் தகாத முறையில் பேசுகிறான். நான் தங்கியுள்ள Ginger Hotel Omr நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் தகவல் சொல்லியும் நடவடிக்கையும் இல்லை.

மணிக்கணக்கில் காத்திருந்தும் பலனில்லை. அதனால் அவனை நானே ஹோட்டலில் இருந்து வெளியே அழைத்து வந்து காரில் சிறைபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தேன். இது இன்று நான் சந்தித்த மிகவும் வேதனையான சம்பவம்.

இதேபோல எத்தனை பெண்கள் தினமும் காவல்துறையின் ஒரு துளி கூட பாதுகாப்பு இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நினைத்து பார்க்க முடியவில்லை. இந்த நபர் போதை மருந்து உட்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் போதைப் பொருள் பழக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர் சுதாகர் ஐபிஎஸ்ஸையும் டேக் செய்துள்ளார். இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அலிஷாவின் செயலை பாராட்டி வருகிறார்கள். உங்களின் தைரியமான செயலுக்கு பாராட்டுகள். பாதுகாப்பாக இருங்கள். விரைவில் நீதி கிடைக்கும் என்று அலிஷாவுக்கு பலர் ஆறுதல் கூறியுள்ளனர்.

மேலும் சம்மந்தப்பட்ட நபரை பிடித்துக் கொடுத்தும், நடவடிக்கை எடுக்காமல் இருந்த காவல்துறையின் மெத்தனப் போக்கையும் கண்டித்துள்ளனர். ஒரு நடிகையை ஹைதராபாத் சென்று கைது செய்யும் காவல்துறை, தகுந்த ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் மோசமான செயல் என கமென்ட் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+