வரிந்து கட்டிய கட்சிகளின் கறுப்புக் கொடி போராட்டம்.. அமித்ஷா நாளை தமிழ்நாடு வருகை ரத்து?
சென்னை: அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசியதால் தமிழ்நாட்டுக்கு நாளை வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கறுப்புக் கொடி காட்டுவதாக அறிவித்திருந்தன. இந்த நிலையில் அமித்ஷாவின் நாளைய தமிழ்நாடு வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ வருகை தருவார்; டிசம்பர் 28-ந் தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் பாஜக மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைப்பார்; பின்னர் திருவண்ணாமலை கோவிலில் வழிபாடு செய்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதற்காக அமித்ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்திருந்தார். இதேபோல கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்திருந்தன.
இந்த நிலையில் அமித்ஷாவின் நாளைய தமிழ்நாடு வருகை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமித்ஷா, தமிழ்நாடு வருகை தருவார் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications