சென்னை எழும்பூர் ரயில்நிலையத்துக்கு வெடிகுண்டு புரளி

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 11 மணிக்கு மர்மபோன் ஒன்று வந்தது. வாலிபர் ஒருவர் செல் போனில் பேசினார். எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்னும் ஒரு மணி நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு அந்த வாலிபர் போனை துண்டித்து விட்டார்.
இதுபற்றி உடனடியாக எழும்பூர் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனை நடத்தினர். நேற்று இரவில் தொடங்கிய இந்த சோதனை இன்று காலை வரை நீடித்தது. இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து வெடி குண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மிரட்டல் விடுத்த வாலிபர் செல்போனில் இருந்து பேசியது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த செல்போன் நம்பரை வைத்து போலீசார் துப்பு துலக்கினர்.
பெரியமேட்டை சேர்ந்த யுவராஜ் என்ற வாலிபரின் செல்போனில் இருந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. யுவராஜை பிடித்து எழும்பூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது யுவராஜ் எழும்பூரில் எனது செல்போன் காணாமல் போய்விட்டது. அதனை நான் தொலைத்து விட்டேன் என்று கூறியுள்ளார். எனவே இந்த செல்போனை எடுத்து வேறு யாராவது மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
செல்போனைத் திருடியது யார் என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications