சென்னை எழும்பூர் ரயில்நிலையத்துக்கு வெடிகுண்டு புரளி

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 11 மணிக்கு மர்மபோன் ஒன்று வந்தது. வாலிபர் ஒருவர் செல் போனில் பேசினார். எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்னும் ஒரு மணி நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு அந்த வாலிபர் போனை துண்டித்து விட்டார்.
இதுபற்றி உடனடியாக எழும்பூர் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனை நடத்தினர். நேற்று இரவில் தொடங்கிய இந்த சோதனை இன்று காலை வரை நீடித்தது. இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து வெடி குண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மிரட்டல் விடுத்த வாலிபர் செல்போனில் இருந்து பேசியது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த செல்போன் நம்பரை வைத்து போலீசார் துப்பு துலக்கினர்.
பெரியமேட்டை சேர்ந்த யுவராஜ் என்ற வாலிபரின் செல்போனில் இருந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. யுவராஜை பிடித்து எழும்பூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது யுவராஜ் எழும்பூரில் எனது செல்போன் காணாமல் போய்விட்டது. அதனை நான் தொலைத்து விட்டேன் என்று கூறியுள்ளார். எனவே இந்த செல்போனை எடுத்து வேறு யாராவது மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
செல்போனைத் திருடியது யார் என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.
-
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்?












Click it and Unblock the Notifications