லஞ்சம், ஊழல், டாஸ்மாக் தான் ஒழிக்கப்பட வேண்டும்.. பிரேமலதா விஜயகாந்த் அனல் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டுமே தவிர சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை. லஞ்சம், ஊழல், டாஸ்மாக் ஆகியவை மட்டுமே ஒழிக்கப்பட வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுங்க சாவடி கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னை போரூர் வானகரம் சுங்க சாவடியை முற்றுகையிட்டு தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Bribery, corruption and Tasmac should be abolished says Premalatha Vijayakanth

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், இந்தியா என்ற பெயரை கூட்டணிக்கு ஏன் வைக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையம் அதை ஏற்கக்கூடாது. மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டுமே தவிர சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை என்று கூறினார்.

லஞ்சம், ஊழல், டாஸ்மாக் ஆகியவை மட்டுமே ஒழிக்கப்பட வேண்டும் . பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் தேமுதிக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் தேர்தலுக்காகவும் கட்சிக்காகவும் கிடையாது மக்களுக்காக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

நாட்டின் பெயரை மாற்றுவது என்பது எளிதல்ல என்றார். இதனிடையே கள்ளக்குறிச்சி மாடு சுங்க சாவடி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் தேமுதிகவினருக்கும் போலீசுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+