பட்ஜெட் தாக்கலின்போது நிர்மலா சீதாராமன் உடுத்தியிருந்த காஞ்சிபுரம் பட்டுப் புடவை.. பின்னணி என்ன?
சென்னை: மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தின் புகழ்பெற்ற காஞ்சிபுரம் கைத்தறி நெசவு பட்டுப் புடவையை அணிந்து இருந்தார். அடர் மெஜந்தா நிற பட்டுப் புடவையை அவர் அணிந்திருந்தார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டின் சிறப்புகளில் ஒன்றான காஞ்சிப் பட்டுப் புடவை அணிந்து வந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்றத்தில் இன்று 9வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் உடை ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போதும் கவனம் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த போது நிர்மலா சீதாராமன், பீகார் மாநிலத்தின் புகழ் பெற்ற புடவையை உடுத்தி இருந்தார். அப்போது, பீகார் சட்டப்பேரவை தேர்தல் காலம். அதனால் பீகாருக்கு ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் சிறப்புமிக்க அடையாளங்களில் ஒன்றான காஞ்சி பட்டுப் புடவையை உடுத்தி இருந்தார். தமிழ்நாட்டுக்கு அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் கைத்தறி நெசவு பட்டுப் புடவையை உடுத்தியிருந்தார்.
இன்று, நிர்மலா சீதாராமன் அடர் மெஜந்தா நிற காஞ்சிபுரம் பட்டுப் புடவை அணிந்திருந்தார். மெஜந்தா நிற கட்டம் போட்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவையில், ஊதா நிற கரை, இளம் பொன் பழுப்பு நிற டிசைன் இடம்பெற்றிருந்தது. இந்த புடவையில் ஜரிகை பயன்படுத்தப்படவில்லை. பட்டு மற்றும் நுணுக்கமான கைவினைத் திறனுக்காக புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற கைத்தறி நெசவுகளில் ஒன்றாகும்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடர் நிற கம்பளி சால்வையும், மஞ்சள் நிற ஸ்வெட்டரும் அணிந்திருந்தார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் பட்டுப் புடவையை பட்ஜெட் தாக்கலின்போது அணிந்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அணியும் புடவையும் கவனம் பெறும். 2019 ஆம் ஆண்டில் தனது முதல் பட்ஜெட்டின் போது, அவர் இளஞ்சிவப்பு நிற மங்களகிரி புடவையை அணிந்திருந்தார். கடந்த ஆண்டு, பீகார் தேர்தலுக்கு முன்பாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பீகார் மாநில பாரம்பரிய புடவையை அணிந்திருந்தார் நிர்மலா சீதாராமன்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications