பயங்கர சத்தத்துடன்.. தொப்பென சரிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்.. சென்னையில் பரபரப்பு
ராயப்பேட்டையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் பழைய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில், 5 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென இன்று இரவு இடிந்து விழுந்து விட்டது.
இது ஒரு பழைய கட்டிடம் ஆகும்.. தொப்பென்று சீட்டு கட்டு போல இந்த கட்டிடம் மளமளவென பயங்கர சத்தத்துடன் சரிந்து இடிந்து விழவும் அந்த பகுதி மக்கள் கலக்கம் அடைந்தனர். இந்த எதிர்பாராத விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட ஆரம்பித்தனர்.. அந்த கட்டிட இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கி உள்ளனரா என்று தேடி வருகின்றனர். ரொம்ப நாட்களாகவே அந்த பழைய கட்டிடம் பூட்டப்பட்டிருந்ததாகவும், அதனால, கட்டிடத்தில் யாருமே இல்லை என்றும் தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
5 அடுக்கு மாடி இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை என்றாலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications