புயல்.. தென் மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.. ரேஷன் கார்டு உஷார்.. முதல்வர் கோரிக்கை
சென்னை: புரேவி புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவாக உள்ள புரேவி புயல், இலங்கை அருகே கரையைக் கடந்து, கன்னியாகுமரி பகுதியை கடந்து, அரபிக்கடலில் மறுபடியும் புதிதாக புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
எனவே, அது தீவிரத்தோடுதான், தமிழகத்தின் தென் மாவட்டங்களை கடந்து அரபிக் கடலுக்கு செல்லும்.

முதல்வர் ஆலோசனை
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நாளை அதீத கனமழை பெய்யக்கூடும் என்றும், மேலும் பல தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்ட நிலையில், இதுபற்றி முதல்வர் தலைமையில் இன்று தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது.

வெளியே செல்ல வேண்டாம்
இதையடுத்து முதல்வர் பொது மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில், கூறியிருப்பதாவது: டிசம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை பெரு மழை, எனவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

மீனவர்கள் திரும்ப வேண்டும்
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். அண்டை மாவட்டங்களில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் அந்தந்த மாநிலங்களில் கரை ஒதுங்க வேண்டும். அவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அண்டை மாநில அரசுகளிடம் உதவி கேட்கப்பட்டுள்ளது. அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதால், பொதுமக்கள் புயல் தொடர்பாக அச்சப்பட வேண்டாம்.

ரேஷன் கார்டுகள் உஷார்
மழை அதிகரித்து வீடுகளுக்குள் தண்ணீர் புக வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பொதுமக்கள் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். அதே நேரம், நாளை, டிசம்பர் 2ம் தேதி, தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் அதீத கன மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications