அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்பட 4 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம்
Recommended Video

சென்னை: அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் உள்பட 4 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையர்கள் பேட்டி அளித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் இதுவரை 127 கோடி ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த பணம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்காக இந்திய தோ்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா, தேர்தல் ஆணைய நிர்வாக இயக்குனர்கள் திலிப் ஷர்மா, திரேந்திர ஓஜா ஆகியோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்றுமுன் தினம் மாலை சென்னை வந்தனர்.

ஆலோசனை
சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் பலத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, ஆட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசியல் கட்சிகள்
அப்போது தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கூறுகையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினோம். 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளை மாற்ற அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நியாயமான முறை
மக்களவை, இடைத்தேர்தல் நடக்கும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பணப்பட்டுவாடா குறித்த வழக்குகளை விசாரித்த விரைவு நீதிமன்றம் அமைக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. நியாயமான முறையில் தேர்தலை நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பதற்றமான வாக்குச் சாவடி
பறக்கும் படையினர் சோதனை என்ற பெயரில் சாதாரண மக்களை துன்புறுத்தக் கூடாது. பதற்றமான வாக்குச் சாவடிகளில் மத்திய போலீஸ் படையை நிறுத்த கட்சி பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். சிறப்பு செலவின பார்வையாளர் ஒருவர் தமிழகத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

4 தொகுதிகளுக்கு
ரபேல் புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. சிவிஜில் ஆப்பை பதிவிறக்கம் செய்து தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் அளிக்கலாம் என்றார் அசோக் லவாசா.

புகார் அளிக்கலாம்
ரபேல் புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. சிவிஜில் ஆப்பை பதிவிறக்கம் செய்து தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் அளிக்கலாம் என்றார் அசோக் லவாசா.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications