சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி
சென்னை: ''விவசாயத்தை விட விளையாட்டு தான் ரொம்ப கஷ்டம்'' என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா பதிலளித்துள்ளார். ''விவசாயம் தான் நம்பர் ஒன். அதுதான் உயிர் நாடி. ஜீவநாடி. சோறு திங்கலனா எவன்யா உயிரோடு இருக்க முடியும்? சோறு தின்றால் தானே விளையாட்டுக்கு போக முடியும்'' என்று கூறினார்.
முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. இந்நிலையில் தான் 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

அப்போது அவர் விவசாயத்தை விட ரொம்ப கஷ்டமான துறை விளையாட்டு துறை என்று கூறினார். இதனால் சிலர் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ''விவசாயத்தை விட ரொம்ப கஷ்டமான துறை விளையாட்டு துறை. இரண்டையும் சமமாக பார்க்கலாம். ஏனென்றால் விளையாட்டு வீரர் காலை 5 மணிக்கு எழுந்து 6 மணிக்கு மைதானத்தில் இருக்க வேண்டும். 3 மணிநேரம் அவனுடைய பயிற்சி இருக்க வேண்டும். கடினமான வேலைகளை முடித்துவிட்டு தான் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். கால்வலி, உடல் வலி இருக்கும். தூக்கம் வரும். 2 ஆயிரம் கலோரிகள் காலையிலேயே போய் இருக்கும்.
இப்படி இருக்கும்போது விளையாட்டு வீரர், வீராங்கனைகள் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாது. இதனால் தான் பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் படிக்கிற பசங்களையும், விளையாடுற பசங்களையும் ஒரே அறையில் வைப்பதே தப்பு. விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு கவனிப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளோம் '' என்றார். விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா இந்த கருத்தை தெரிவித்தார்.
ஆனால் இந்த கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயத்தை, விளையாட்டு துறையுடன் ஒப்பிட்டு பேசியதை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னையில் நடந்த படவிழா ஒன்றில் நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா பங்கேற்று பேசினார். அப்போது அவரிடம் ஒருவர், ''விளையாட்டு அமைச்சர்(ஆதவ் அர்ஜுனா) விவசாயத்தை விட விளையாட்டு தான் கடினமான ஒன்று என பேசி உள்ளார்.. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என கேட்கப்பட்டது.
அதற்கு கஸ்தூரி ராஜா, ''அவங்ககிட்ட வம்பில் மாட்டிவிடாதீர்கள். அதெல்லாம் நமக்கு தேவையில்லை. ஆனால் விவசாயம் தான் நம்பர் ஒன். அதுதான் உயிர் நாடி. ஜீவநாடி. சோறு திங்கலனா எவன்யா உயிரோடு இருக்க முடியும்? சோறு தின்றால் தானே விளையாட்டுக்கு போக முடியும். விளையாட்டு என்பது இளைஞர்களை கட்டமைப்பது.
ஆனால் விவசாயம் அப்படியானது இல்லை. ஒவ்வொரு உயிர்களையும் காப்பாற்றுவது. உயிருள்ள ஜீவராசிகளுக்கும் விவசாயம் வேண்டும். ஆனால் ஆடு, மாடுகள் எல்லாம் விளையாட்டுக்கு போகிறதா? ஆனால் ஆடு, மாடுகளுக்கும் எல்லாம் விவசாயம் வேண்டும். அதனால் விவசாயத்துடன் எதையும் ஒப்பீடு செய்ய வேண்டாம்'' என்று கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications