கிரையம் பண்றீங்களா? பத்திர ஆபீஸில் டோக்கன் கிடைச்சதா? "ஆடியோ" வரலையே.. பதிவுத்துறை மீண்டும் அதிரடி?
சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நன்மைக்காகவே, பத்திரப்பதிவு துறையில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன.. இதனால், மக்களின் நேரம் மிச்சமாவதுடன், அவர்கள் மேற்கொள்ளும் பணிகளும் எளிதாக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆன்லைன் வசதி: அதன்ஒருபகுதியாக, டோக்கன் முறை கொண்டுவரப்பட்டது. அதாவது, பத்திரம் பதிய விரும்புவோர், அது தொடர்பான தகவல்களை "ஆன்லைன்" முறையில் பதிவிட வேண்டும்..
இதன் அடிப்படையில், முதல்கட்ட சரிபார்ப்பு முடிந்த நிலையில், பத்திரப்பதிவுக்கான நேரம் ஒதுக்கி, டோக்கன் நம்பர் தரப்படும்.. இந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களின்படியே, நபர்கள் பதிவுக்கு செல்ல வேண்டும்.. டோக்கனில் தரப்பட்டிருக்கும் வரிசை அடிப்படையில்தான் பத்திரப்பதிவும் மேற்கொள்ளப்படும்.
ஆனால், இம்முறையில் சில குழப்பங்கள் எழுந்தன.. டோக்கனில் நம்பர் தந்திருந்தாலும்கூட, பொதுமக்கள் சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு முன்கூட்டியே வந்துவிடுகிறார்கள்.. அதுவும் ஒரே சமயத்தில் பலரும் காத்திருப்பதால், அடுத்தது யாருடைய டோக்கன் நம்பர் வரும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது.
பதிவுத்துறை: வரிசையில் காத்திருக்கும் மக்கள் அனைவருக்கும் எளிதாக தெரியும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என்று பத்திரப்பதிவு துறை தெரிவித்திருந்த நிலையில், சமீபத்தில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது.
அதன்படி, பத்திரப்பதிவுக்கான டோக்கன் நம்பர், விண்ணப்பதாரர் பெயர் போன்ற விவரங்கள் அனைத்தும், அனைவருக்கும் தெரியும்வகையில், ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும், 52 அங்குல திரை எல்இடி திரையில் காணும்வகையில் வசதியை செய்து தந்துள்ளது.. அதேபோல, டோக்கன் நம்பரை தெரிவிக்கும்போது, வெளிப்படையாக அறிவிக்கும் வகையில் மைக் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
புதிய கோரிக்கை: கிட்டத்தட்ட ரயில் நிலையங்களில் உள்ளது போலவே, தெளிவாக அறியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டமும் முழுமையாக பலன் தரவில்லையாம்.
காரணம், டோக்கன், வரிசை எண் விபரங்களை பெரிய ஸ்கிரீனில் காட்டப்படுகிறது என்றாலும், வெறும் காட்சியாக மட்டுமே பார்க்க முடிகிறதாம்.. அதன் ஆடியோவை கேட்க முடியவில்லையாம்.. எனவே, ஒலி வழி அறிவிப்புக்கான வசதியும் செய்து தந்தால், எளிதாக இருக்கும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications