கிரையம் பண்றீங்களா? பத்திர ஆபீஸில் டோக்கன் கிடைச்சதா? "ஆடியோ" வரலையே.. பதிவுத்துறை மீண்டும் அதிரடி?
சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நன்மைக்காகவே, பத்திரப்பதிவு துறையில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன.. இதனால், மக்களின் நேரம் மிச்சமாவதுடன், அவர்கள் மேற்கொள்ளும் பணிகளும் எளிதாக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆன்லைன் வசதி: அதன்ஒருபகுதியாக, டோக்கன் முறை கொண்டுவரப்பட்டது. அதாவது, பத்திரம் பதிய விரும்புவோர், அது தொடர்பான தகவல்களை "ஆன்லைன்" முறையில் பதிவிட வேண்டும்..
இதன் அடிப்படையில், முதல்கட்ட சரிபார்ப்பு முடிந்த நிலையில், பத்திரப்பதிவுக்கான நேரம் ஒதுக்கி, டோக்கன் நம்பர் தரப்படும்.. இந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களின்படியே, நபர்கள் பதிவுக்கு செல்ல வேண்டும்.. டோக்கனில் தரப்பட்டிருக்கும் வரிசை அடிப்படையில்தான் பத்திரப்பதிவும் மேற்கொள்ளப்படும்.
ஆனால், இம்முறையில் சில குழப்பங்கள் எழுந்தன.. டோக்கனில் நம்பர் தந்திருந்தாலும்கூட, பொதுமக்கள் சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு முன்கூட்டியே வந்துவிடுகிறார்கள்.. அதுவும் ஒரே சமயத்தில் பலரும் காத்திருப்பதால், அடுத்தது யாருடைய டோக்கன் நம்பர் வரும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது.
பதிவுத்துறை: வரிசையில் காத்திருக்கும் மக்கள் அனைவருக்கும் எளிதாக தெரியும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என்று பத்திரப்பதிவு துறை தெரிவித்திருந்த நிலையில், சமீபத்தில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது.
அதன்படி, பத்திரப்பதிவுக்கான டோக்கன் நம்பர், விண்ணப்பதாரர் பெயர் போன்ற விவரங்கள் அனைத்தும், அனைவருக்கும் தெரியும்வகையில், ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும், 52 அங்குல திரை எல்இடி திரையில் காணும்வகையில் வசதியை செய்து தந்துள்ளது.. அதேபோல, டோக்கன் நம்பரை தெரிவிக்கும்போது, வெளிப்படையாக அறிவிக்கும் வகையில் மைக் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
புதிய கோரிக்கை: கிட்டத்தட்ட ரயில் நிலையங்களில் உள்ளது போலவே, தெளிவாக அறியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டமும் முழுமையாக பலன் தரவில்லையாம்.
காரணம், டோக்கன், வரிசை எண் விபரங்களை பெரிய ஸ்கிரீனில் காட்டப்படுகிறது என்றாலும், வெறும் காட்சியாக மட்டுமே பார்க்க முடிகிறதாம்.. அதன் ஆடியோவை கேட்க முடியவில்லையாம்.. எனவே, ஒலி வழி அறிவிப்புக்கான வசதியும் செய்து தந்தால், எளிதாக இருக்கும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications