அதிகரிக்கும் தள்ளுவண்டிக் கடைகள்.. வியாபாரிகள் ஹேப்பி.. மக்களும் மகிழ்ச்சி!
சென்னை: கொரானா தொற்று பரவி வரும் சூழலில் கடந்த 24-ம் தேதி முதல் தமிழகத்தில் தளர்வுகளின்றி ஊரடங்கு அமலில் உள்ளது.
தமிழக அரசின் வேளாண்துறை சார்பில் தமிழகம் முழுவதும் வாகனங்கள் மூலம் வீடு வீடாக சென்று காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையிலிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்து வருகிறது.

முதலில் 1000 வாகனங்கள் இருந்த வீதத்தில் தற்போது 5000 வாகனங்களுக்கு மேல் சென்னையில் மட்டும் செயல்படுகின்றது.
நடமாடும் கடைகள் அதிகமான காரணத்தினால் அதிக அளவில் வியாபாரம் இல்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பொதுமக்களும் குறைந்த அளவே வாங்கி செல்கிறார்கள் எனவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
அதிக விலை விற்பதாக பொதுமக்களிடம் குற்றச்சாட்டு எழுகிறது என்று கேட்டதற்கு, மொத்த விற்பனையில் வாங்கி வந்து கூடுதலாக 5 அல்லது 10 ரூபாய்க்கு விற்றால் தான் லாபம் கிடைக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
விலைகள் பொறுத்தவரை , உருளைக் கிழங்கு கிலோ -ரூ. 40 , காரட் கிலோ -ரூ. 50 , இஞ்சி - ரூ. 80, மிளகாய் - ரூ.50
தக்காளி கிலோ - ரூ. 50, பீன்ஸ் கிலோ -ரூ.120, வெங்காயம் கிலோ - ரூ. 30க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஊரடங்கு நேரத்தில் இது போன்ற முயற்சி மேற்கொண்டது உதவியாக உள்ளது. இதற்கு தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். விலை பொறுத்தவரை குறைந்த அளவில் தான் உள்ளது, அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் அளவிற்கு விலை குறைவாகத்தான் உள்ளது. மளிகைப் பொருட்கள் விற்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications