டாஸ்மாக் கடைகள்.. 24 பேர் போட்ட விசித்திரமான வழக்கு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுபான கடைகளில் 500 கடைகளை மூடுவது என தமிழக அரசு முடிவெடுத்து, குறைந்த விற்பனை உள்ள கடைகள், மத வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகில் உள்ள கடைகள், நீண்ட நாட்களாக பொதுமக்கள் ஆட்சேபிக்கக்கூடிய இடங்களில் உள்ள கடைகளை மூடுவது என விதிகள் வகுக்கப்பட்டன.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மண்டல மேலாளர்கள் பரிந்துரைப்படி, குறைந்த வருவாய் உள்ளவை, குறைந்த இடைவெளியில் அருகருகே உள்ளவை, வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ளவை, நீதிமன்ற உத்தரவு உள்ளவை, நீண்ட நாளாக பொதுமக்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் கடைகள் என 500 கடைகள் தேர்வு செய்யப்பட்டன.
சென்னை வடக்கில் 20, சென்னை மத்தியில் 20, சென்னை தெற்கில் 21, காஞ்சிபுரம் வடக்கில் 15, காஞ்சிபுரம் தெற்கில் 16, திருவள்ளூர் கிழக்கில் 32, திருவள்ளூர் மேற்கில் 14 என சென்னை மண்டலத்தில் 138 கடைகள் மூடப்பட்டன,
கோயம்புத்தூர் மண்டலத்தில் கோவை வடக்கு, தெற்கு, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூரில் 78 கடைகள் மூடப்பட்டன. மதுரை மண்டலத்தில் மதுரை வடக்கு, தெற்கு, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனியில் 125 கடைகளும், சேலம் மண்டலத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணத்தில் 59 கடைகளும் மூடப்பட்டன.
திருச்சி மண்டலத்தில் திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 100 கடைகள் என தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 5,329 கடைகளில் 500 கடைகள் மூடப்பட்டன,
500 கடைகள் மூடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், அரசு வகுத்த விதிகளின்படி கடைகள் மூடப்படவில்லை என்றும், மூடுவதற்கு வகுத்த விதிகளை மீறி, தங்கள் கட்டடங்களில் உள்ள கடைகள் மூடப்பட்டுள்ளதாக, பாலமுருகன், அமல்ராஜ், நாகேஸ்வரி உள்ளிட்ட 24 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தங்களது கட்டடங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளை தொடர்ந்து நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.சரவணன், வழக்கு குறித்து தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications